Sunday, May 16, 2021

உங்கள் இல்லத்தில் குழந்தைகள் உள்ளனரா ?

 உங்கள் இல்லத்தில் குழந்தைகள் உள்ளனரா ?

வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா !!
- டாக்டர் பாலசாண்டில்யன் (மனநல ஆலோசகர்/ கல்வியாளர்/ மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்)
கடந்த ஓரிரு ஆண்டுகளாக இந்த கொரோனா நோய் காரணமாக முறையான (Formal and systematic) கல்வி பிள்ளைகளுக்கு இல்லை. பள்ளிகள் திறக்கவில்லை. இணையவழிக் கல்வியே நடக்கிறது.
அதனால் இங்கே சில யோசனைகள் :
தினம் ஒரு பக்கம் ஏதாவது ஒரு புத்தகத்தில் அல்லது செய்தித்தாளில் இருந்து தமிழ், மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளில் ஒரு பக்கம் எடுத்துக்கொண்டு சத்தமாக வாசிக்க வேண்டும்.
தினமும் அதே போல ஒரு பாரா (பத்தி) எடுத்துக் கொண்டு நோட்டில் எழுதிப் பழக வேண்டும். அப்போது தான் கையெழுத்துப் பழக்கம் மறந்து போகாமல் இருக்கும்.
அதே போல 10 வயதுக்குள் இருக்கும் பிள்ளைகள் டேபிள்ஸ் என்று சொல்லக்கூடிய வாய்ப்பாடு எடுத்து சொல்லி மற்றும் எழுதிப் பார்க்க வேண்டும்.
பாட்டு கிளாஸ் போகக் கூடிய குழந்தை என்றால் தினம் ஒரு பாட்டு நிச்சயம் பாடிப் பழக வேண்டும்.
நடனம் என்றால் சில நிமிடங்களாவது நடனம் செய்து பழக வேண்டும்,
தொடராத ஒன்று தொடராது. பழக்கம் விட்டுப் போனால் அதுவே பழக்கமாக மாறும்.
பெரிய பிள்ளைகள் என்றால், ஆன்லைன் மூலமாக ஏதாவது ஒரு பரீட்சை எழுதிப் பார்க்கலாம்.
நிறைய இலவசமான இ - கோர்ஸ் இருக்கின்றன. அவற்றில் இணைந்து பல புதிய சான்றிதழ்கள் பெறலாம். கற்ற எதுவும் வீணாகாது.
அயல் நாட்டு மொழி, வேறு ஒரு மொழி (ஹிந்தி, தெலுங்கு போல ) கூட சிறிது சிறிதாக பயிற்சி பெறலாம்...எந்த கட்டணமும் இல்லாமல்.
மீதிப் பொழுதில் புத்தகம் வாசித்தல், இசை கேட்டல், டிவி நிகழ்ச்சிகள் அல்லது படங்கள் பார்த்தல் இவை எல்லாம் செய்யலாம்.
முறைகள் அற்ற பொழுது தான் நம்மை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல பழக்கங்கள் தான் நாளையை உருவாக்குகின்றன.
இங்கே சொல்லப்பட்டவை எல்லாம் பொதுவான யோசனைகள்.
அவரவர் வீட்டிற்கு, பள்ளிக்கு, வயதுக்கு ஏற்ப நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.
ஆனால், நிச்சயம் பிள்ளைகள் பயனுள்ள விஷயங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளுவது மிகவும் அவசியம். (Getting engaged usefully for a better future)
யாருமே சொல்லாமல் இவற்றை செய்யும் பிள்ளைகளுக்கு பெற்றோர் நிச்சயம் பரிசுகள் பாராட்டுக்கள் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும்.
அதுவும் முக்கியம். எப்போதும் கத்துவது, குறை சொல்லுவது மட்டும் பிள்ளைகளை நல்வழிப்படுத்தாது. நினைவிருக்கட்டும்.

No comments:

Post a Comment