Monday, December 24, 2012

some of the recent writings



·       *   காற்று வேண்டுமா ஜன்னலை திற
கடவுள் புக மனதை திற

·        *  காட்சிகள் காண கண்ணை திற
நறுமணம் நுகர நாசியை திற
இசை தனை ரசிக்க காதை திற
இறை அருள் பெற மனதை திற

·         *அவனின் சித்தமே நமது எண்ணமாக இருந்தால்
மனதில் என்றும் ஆனந்தமும் அமைதியும் நிலவும் ...
·       
*         *  கப்பலை சுற்றி கடலில் நீர் இருந்தாலும்
கப்பலில் நீர் புகுந்தாலே ஒழிய அது மூழ்குவதில்லை
அது போல்
நம்மை சுற்றி எதிர்மறையாய் எவ்வளவு நடந்தாலும்
நமக்குள் அது புகாத வரை நம்மை அது வீழ்த்திடாது
·      
           *  சின்ன சின்ன விஷயங்களிலும் சந்தோஷம் உண்டு ....ஆனால்
சந்தோஷம் என்பது சின்ன விஷயம் இல்லை....

    *ஒரு ஊருன்னா குப்பை இருக்க கூடாது...ஒரு மனுஷன்னா தொப்பை இருக்க கூடாது...!
பெருங்காயத்தால் மணப்பதில்லை சமையல்....பெண்களின் பெருந்தன்மையால் தான்...!

துட்டு குடுத்தா இனிக்காது வாழ்க்கை ...விட்டு கொடுத்தால் இனிக்கும் ....!
விழித்து எழுந்தால் கிடைப்பதில்லை வெற்றி...விழுந்து எழுந்தால் கிடைப்பதே வெற்றி....!
வெற்றி என்டுமே முடிவடையாது ...தோல்வி என்றும் முடிவாகாது ...!
முயன்றால் போதாது ...முற்று பெற வேண்டும் அது வெற்றியில்...!
காலெண்டர்ல தேதி கிழிக்கறது முக்கியம் அல்ல. அந்த தேதியில் நாம என்ன கிழிச்சோம் என்பது தான் முக்கியம்
இன்று புஸ்தக புழுவாக இரு பரவாயில்லை..நாளை வண்ணத்துப் பூச்சியாக மாற வேண்டும் மறந்து விடாதே !
கருப்பை இல்லை என்றால் குழந்தை இல்லை....பணப்பை இல்லை என்றால் வாழ்வே இல்லை...!
அடியாத மாடு படியாது ...இது பழமொழி....அடிபடாம சிலை வடியாது...இது புது மொழி..!
ஜெயிப்பதற்கு நகை விற்க வேண்டாம்....புன்னகைக்க கற்க வேண்டும் ....!
காற்றும் இசையாகும் வாசித்தால்.... வார்த்தையும் கவிதையும் யோசித்தால்....!
கால் இடறினால் பரவாயில்லை ....நா இடறக் கூடாது ...!
இருட்டும் போது எருமை தெரியாது.....இருக்கும் போது அருமை தெரியாது. !
கற்பனை இல்லாத உலகை கூட கற்பனை செய்து விடலாம் ...விற்பனை இல்லாத உலகை...?!
Hope you enjoyed Bala’s punch dialogues....!

No comments:

Post a Comment