ஏனோ தெரியவில்லை
என்னமோ தெரியவில்லை
உறக்கமும் வரவில்லை
உந்தன்முகம் மறையவில்லை - கண்ணில்
உந்தன் முகம் மறையவில்லை (ஏனோ)
ஒருமுறை பார்த்ததுமே
ஓடவில்லை எந்தன் நேரம்
ஒருமுறை பார்த்ததிலே
ஓயவில்லை இமைகளில் ஈரம்
மறுமுறை பார்த்துவிட
மனதிலே ஏக்கம் ஏக்கம்
மறுமுறை பார்த்துவிட்டால்
மறையுமோ எந்தன் தூக்கம் (ஏனோ)
அழகென்பது மொத்தமும் நீயோ
அகிலத்தின் சித்தமும் நீயோ
பழகிடஎண்ணி பார்வை விரித்தேன்
பாங்கது தெரியாது பாதி சிரித்தேன்
தாபம் போக்கிட தவமிருப்பேன்
தாங்கிச்சுமக்க யுகம் பொறுப்பேன்
தங்க நிலாவே நீ வருவாயோ
தவிக்குமெனக்கு சுகம் தருவாயோ (ஏனோ)
(I
heard a very old melody song from Sunny - sung by Lata ji - "Jaanae
kyaa baath hai neendh nahi aathi badi lambi raath hai - I got inspired
to write the above poem)
No comments:
Post a Comment