Wednesday, August 1, 2018

Bala's poems

நீர்' வந்து அணைக்கும் போது
தீ நான் என்ன செய்வேன்
என்னோடு
என் துக்கமும் வெட்கமும் 
பஸ்மமானது கண்டேன்... 
காதலெனும் பருவ நதியே..
அள்ளிச் செல்.. என்னை 
ஆனந்தக் கடலுக்குள்..!
- பாலசாண்டில்யன்

புள்ளிகளும் அரைப்புள்ளிகளும் 
உன் எழுத்து வரியை நிறுத்தலாம்.
பேச்சும் செயலும் தான் நீ யார் என்பதை நிலைநிறுத்துகிறது 
அதுவே பின்னாளில் 
கேள்விக் குறியாக??
கேலிக்குறியாக ?!!
ஆச்சரியக்குறியாக ஆகிறது.!!
- பாலசாண்டில்யன்


உன் மலர்க்கரம் பட்டு
வருகின்ற மெசேஜ்களில்
உந்தன் வாசனை !


காலங்காலமாய் கரை நனைக்கும்
அலைக்கில்லை அலுப்பும் சலிப்பும்...
என்றோ வந்து தரை நனைக்கும்
மழைத்துளியைப் பார்...
ஓவர் டைம் பார்த்த அலுவலர் போல 
அலம்பலும் செருக்கும்...
சற்று நேரம் பார்த்த வேலைக்கே
விருது கேட்பதென்ன ஞாயம்...?!
- பாலசாண்டில்யன்


ஏணிகள் இருந்தும் தோணிகள் இருந்தும்
தாண்ட முடியவில்லையே கரை
உன்னுள் உணர்ந்து பார் இருக்கிறது எத்தனையோ நிறை
உதவத் துடிக்கிறான் இறை
வேண்டாமே உன் மனதில் குறை


எல்லோரையும்
வண்ணம் தீட்ட
ஒரே தூரிகையா?
எல்லோரையும்
கணித்திட
ஒரே எடைக்கல்லா?
எல்லோரிடமும்
ஒரே வார்த்தையா
எல்லோர் மீதும்
அதே பார்வையா?
பலமுறை
பலவகை
பல்நோக்கு
எல்லாம் பலன் தரும்...!!
- பாலசாண்டில்யன்



No comments:

Post a Comment