Saturday, September 1, 2018

Krishna Krishna

ராகம்: தேஷ்                     தாளம்: ஆதி 

குழலூதி வருகின்ற கண்ணன் - அன்பர் 
குரல் கேட்டு வருகின்ற மன்னன்  - குழல் 

அழகான சிலை கூட அவன் பாட மயங்கும் 
அமுதூறும் இதழ் நாடி அவன் நாமம் படிக்கும் 
தழுவாத இளந்தென்றல் அவன் நாதம் கொணரும் 
தரும் போதை அவன் கீதம் தேனாக இனிக்கும் - அவன் குழலூதி 

மழைமேகம் போல் எந்தன் மனந்தன்னில் புகுந்து 
மறைந்தோடி ஒயிலாக இருள் தன்னில் பறந்து 
இழைந்தோடும் உன் அன்பில் எனை நானே மறந்து 
இமைமூடி இசைபாடி எடுக்கின்ற விருந்து - காண - கான (குழலூதி)

பாடல் மற்றும் இசை: டாக்டர் பாலசாண்டில்யன் 

No comments:

Post a Comment