Saturday, September 1, 2018

Self Confidence Song




                 
                                                                                                                  
சாமி போல காக்க யாருமில்லை
சாவு தானா வாழ்வின் எல்லை
யாருக்குத் தான் இல்லை தொல்லை
எழுந்து நில் துணிவு கொள் துன்பமில்லை

திறனை நினை வழியை நினை
கருணை நிறை கடவுள் துணை
சவால்க ளெல்லாம் தூள் தூளாகும்
நம்பிக்கை யுந்தன் போர் வாளாகும்

நடந்ததைத் திரும்பிப் பாரா முனைப்பு
நடப்பதில் கவனம் முழு நினைப்பு
நாளையென்பது அவன் பொறுப்பு
நம்பு உன்னை கொள்ளாதே வெறுப்பு

இழந்த வாய்ப்பால் இல்லை பெருமை
எழுந்து முன்னேறு வாழ்வு அருமை
இறையின் ஒளியில் உனது வாழ்க்கை
இன்பம் பிறக்கும் இனியேன் அழுகை

- முனைவர் பாலசாண்டில்யன்
9840027810

No comments:

Post a Comment