ஒரே கனா - தமிழில் கஜல்
ஒரே கனா என் நெஞ்சிலே
ஒளித்து நான் வைத்திருந்தேன்
ஒரே வினா என் நினைவிலே
வாழ்வே முடியும் அந்நாளிலும்
வாசமும் சுவாசமும் நீயென்பேன்.. (ஒரே)
கனாவும் வினாவும் நிறைவாகுமே - உன்
கண்விழிப் பார்வையில் ஒரு தீண்டலிலே
விலகாதே பகல் வெளிச்சம் போலே
வான்போலி ருந்திடு நிரந்தரமாய்
பார்க்கு மிடமெங்கும் தெரிகின்றாய்
பாசம் பொழிகின்ற அன்னை போலே (ஒரே)
- பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment