தர்ஷிணி தன்னார்வ தொண்டு நிறுவனம் - இந்த ஆண்டு 25 ஆண்டுகள் நிறைவு. 2019ல் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தார்கள். இம்முறை மீண்டும். சௌமியா மேடம் மற்றும் அவரது உற்சாகம் நிறைந்த குழாம் (ஹேமா
ஸ்ரீதரன் - என் மாமா மகள் உட்பட) மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர். பாராட்ட வார்த்தைகள் இல்லை.
லேனா தமிழ்வாணன் ஸ்டைலில் மிகச்சரியாக நேரத்தோடு முடித்து இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாமே என்று தோன்றும் போது நிறைவு செய்தேன். பேசுபவர்கள் கேட்பவர்களின் கண்ணோடு கண் தொடர்பு இருந்தால் பயனளிக்கும் என்று நம்புவது உண்டு. இந்த ஆடியன்ஸ் கூட ஐ டு ஐ கான்டேக்ட் செய்ய முடியாது என்பது பெரிய சவால் என்பதை நான் முதல் சில நிமிடங்களிலேயே புரிந்து கொண்டேன்.
பார்வையாளர்கள் சார்பில் ஒரு முக்கிய நபர் சிறப்பாக பாராட்டி நிறைய கற்றுக் கொண்டோம் நன்றி என்று பேசினார்.
பிரிய மனமில்லாமல் கிளம்பும் போது நிறைய பேர் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு எனது அந்தஸ்தை உயர்த்தினர். மகிழ்ச்சியோடு வீடு திரும்பினேன்.
மாற்றுத்திறனாளிகள் அனைவருமே மிகவும் அதிக திறமையுடன் நம்பிக்கையுடன் இருப்பதைக் காண முடிந்தது.
எனது புதிய மாட்யூல் ரெடி... யார் அங்கே கூப்பிட யார் ரெடி?!
No comments:
Post a Comment