Sunday, January 25, 2015

Romantic composition

நான் உண்மை புரிந்தேன்
நீ என்னைப் புரிந்தாய்
திருமணம் புரிவாயா என்னை
தோளில் சரிவாயா பெண்ணே....
நான் காத்திருப்பேன் யுக யுகமாய்..
பார்த்து நிற்பேன் மலர் முகமாய்..(நான்)
என்னை காலி செய்தேன் உன்னை நிரப்ப
நினைவு வேலியிட்டேன் நெஞ்சம் பரப்ப
வலிகள் மறந்து நின்றேன் உன்னை அடைய
விழிகள் திறந்து வைத்தேன் வந்து நீ நுழைய
தீர்வாய் வருவாய் மனபாரம் குறைய
தீராநதி காதல் நீ எனக்குள் உறைய (நான்)
பார்வை சமையல் செய்து பரிமாறினாய்
கண்ணில் கவியெழுதி மனம் கூறினாய்
மனமலர் வாடாதிருக்க நீர் ஊற்றினாய்
நானுன் வாழ்வு என்று பறை சாற்றினாய்
ஏனின்னும் எனையடைய தடுமாறினாய்
வா வந்து வரமாக உடன் மாறுவாய் (நான்)
- பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment