Saturday, January 31, 2015

My poem

பார்வை 
------------------
மாடப்புறாவே நீ ஒரு குரியர் பாய் 
கருமைக் காகமே நீ காலிங் பெல் 
தோகை மயிலே நீ வானிலை அறிக்கை 
வண்ணத்துப்பூச்சியே நீ மகரந்தச் சேர்க்கை 
பட்டுப் புழுவே நீ பளபள சேலை 
பறக்கும் தேனியே நீ இனிமைத் தேனே 
நாயே நன்றி உனது மறுபெயர் 
கழுதையே பொதி உனது செயல் 
மாடே பால் உனது கொடை 
மரமே நீ பலரின் நிழற்குடை 
மலையே நீ தரையின் எல்லைக்கோடு 
கடலே நீ மீனின் புகுந்த வீடு 
வானே நீ உலகின் மேற்கூரை 
தரையே நீ மறைத்திருப்பது பற்பல வேரை 
மழையே நீ கடலின் சில்லறை மொழி 
ஒளியே நீ கதிரவனின் அன்பு வழி 
- பாலசாண்டில்யன் 

தலைவர்கள் பிரச்சாரம் செய்தாலும்
வாக்களிப்பது மக்கள் தான்
பெற்றோர் பணம் கட்டினாலும்
மதிப்பெண் எடுப்பது மாணவர் தான்
மேலாளர் திட்டமிட்டாலும்
உற்பத்தி செய்வது உழைப்பாளர் தான்
காசு கொண்டு வந்து கணவன் தந்தாலும்
குடும்பம் நடத்துவது மனைவி தான்
இயக்குனர் ஸ்டார்ட் கட் என்றாலும்
இயல்பாய் படைப்பது கலைஞர் தான்
நண்பர்கள் ஆயிரம் இருந்தாலும்
வாழ்க்கை சூழலை சமாளிக்க நாமே
அதிபர் வந்து விஜயம் செய்தாலும்
சிரமப்படுவது ஆம் ஆத்மி தான்
பார்வையாளர்கள் ஆரவாரமிட்டாலும்
விளையாடி ஜெயிப்பது வீரர்கள் தான்
அணுசக்தி கண்டுபிடித்தாலும்
அரண் செய்வது காவலர் தான்
வாழ்வது நாம் தானென்றாலும்
வலி சுமந்தது நம் தாய் தான்
- பாலசாண்டில்யன்

தெளிவான குழப்பம் 
சிறிய கூட்டம் 
இயல்பான நடிப்பு 
சீரியசான ஹுமெர் 
ஒரே சாய்ஸ் 
ஒரிஜினல் காப்பி
காணவில்லை எனக் கண்டுபிடித்தேன்
அழகான அசிங்கம்
சரியான மதிப்பீடு
அது போலத் தான் ....
நோயில்லா உடம்பு என்பது....
மரணமிலா வாழ்வு என்பது...
அதைவிட
சாதியற்ற சமூகம் என்பதும்...
வரியில்லா பட்ஜெட் என்பதும்....!!

No comments:

Post a Comment