Saturday, January 5, 2013

This is about Mother-in-laws(மாமியார்கள்)



மாமியார்கள் ஜாக்கிரதை !
-          Dr. Balasandilyan

- உங்கள் குழந்தைகளை வளர்க்க பெரும்பாலும் அவர்கள் அபிப்ராயத்தை திணிப்பார்கள்

- வாழ்வில் சிறந்தது எது என்று தனக்கு மட்டுமே தெரியும் என்பது போன்ற தோரணை

- எப்போதும் "எங்கள் நாட்களில் இப்படி செய்தது கிடையாது" என திரும்ப திரும்ப சொல்லுதல்

- உங்கள் தாய்மையை எப்போதும் குற்றம் சொல்லுதல்

- உங்கள் குழந்தைகளுக்கு கண்ட கண்ட உணவுகளை கொடுத்து விடுதல்

- உங்கள் குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று தனக்கே தெரியும் போல நடிப்பது

- எது சொன்னாலும் காதுகளை மூடிக் கொள்வது

- தனது மகனை உங்களை விட தனக்கு அதிகம் தெரியும் என தெரிவித்துக் கொண்டே இருப்பது

- நீங்கள் வீட்டுக்குள் நுழையும் போது வீட்டை சீர் செய்வது போல நடிப்பது

- பணம் காசு விஷயங்களில் அதிகமாய் தலையிடுவது

- தன் மகனின் நல்ல குணங்களுக்கு அடிக்கடி பெருமை பட்டுக் கொள்வது ..அதற்கு தானே காரணம் என அறிவிப்பது

- "ரொம்ப இளைத்து விட்டாயே ...சரியாக சாப்பிடு" என்று தன் மகனை அடிக்கடி சொல்லி விட்டு உங்களை ஓரக் கண்ணில் பார்ப்பது

- "நீ இன்னும் வெயிட் குறைக்கணும்" என்று உங்களை கலாய்ப்பது

- "லேன்ட் லைனில் பேசு ...மொபைல் பில் ஏறிடும்" என்று உங்களை கட்டுபடுத்துவது

- "என் பேரன் பேத்திகளை சரியா கவனி ...எப்போதும் உன்னையே பார்த்துக் கொண்டால் எப்படி?" என்று உங்களை எரிச்சலூட்டுவது

- உங்கள் கணவரிடம் "இதை அவளிடம் சொல்லாதே" என்று சில அல்ப ரகசியங்களை உண்டாக்குவது

- "வர வர உன் ட்ரெஸ்ஸே சரி இல்லை" என்று கமெண்ட் அடித்து உங்கள் மனதை காயப்படுத்துவது

- உங்கள் குழந்தைக்கு என்ன உணவு எப்போது கொடுக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வதை "நானும் பிள்ளை வளர்த்திருக்கிறேன்" என்று நிராகரித்தல்

- நீங்கள் பரிமாறும் போது உங்கள் உணவை மட்டம் தட்டுவது - தனது ருசி போல இல்லை என்று ...

- நீங்கள் அருகில் வரும் சமயம் பார்த்து சென்ட் அடித்து கொண்டு உங்களை உற்று பார்த்து நிற்பது

- நீங்கள் தேய்த்த பாத்திரத்தை மீண்டும் தேய்ப்பது

- நீங்கள் மடித்த  துணிகளை மீண்டும் மடிப்பது 

- உங்களுக்கு பிடித்த நாய்க்கு உணவு தராமல் கோபப்படுத்துவது

- நீங்கள் சப்போர்ட் செய்யும் வேலைகாரப் பெண்ணை வேண்டும் என்று திட்டுவது

- நீங்கள் உங்கள் குழந்தைக்கு பாடம் சொல்லி கொடுத்தால் "தானே பெரிய மேதாவி ...இவளுக்கு பாடம் வேறா" என்று முணுமுணுப்பது

இப்படி நீளும் பட்டியலில் உங்களை எப்படி காத்துக் கொள்ளலாம் என்று யோசியுங்கள் .....!

No comments:

Post a Comment