மாமியார்கள் ஜாக்கிரதை !
-
Dr. Balasandilyan
- உங்கள் குழந்தைகளை வளர்க்க பெரும்பாலும் அவர்கள் அபிப்ராயத்தை திணிப்பார்கள்
- வாழ்வில்
சிறந்தது எது என்று தனக்கு
மட்டுமே தெரியும் என்பது போன்ற தோரணை
- எப்போதும்
"எங்கள் நாட்களில் இப்படி செய்தது கிடையாது"
என திரும்ப திரும்ப சொல்லுதல்
- உங்கள்
தாய்மையை எப்போதும் குற்றம் சொல்லுதல்
- உங்கள்
குழந்தைகளுக்கு கண்ட கண்ட உணவுகளை
கொடுத்து விடுதல்
- உங்கள்
குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும் என்ன
பிடிக்காது என்று தனக்கே தெரியும்
போல நடிப்பது
- எது
சொன்னாலும் காதுகளை மூடிக் கொள்வது
- தனது
மகனை உங்களை விட தனக்கு
அதிகம் தெரியும் என தெரிவித்துக் கொண்டே
இருப்பது
- நீங்கள்
வீட்டுக்குள் நுழையும் போது வீட்டை சீர்
செய்வது போல நடிப்பது
- பணம்
காசு விஷயங்களில் அதிகமாய் தலையிடுவது
- தன்
மகனின் நல்ல குணங்களுக்கு அடிக்கடி
பெருமை பட்டுக் கொள்வது ..அதற்கு
தானே காரணம் என அறிவிப்பது
- "ரொம்ப
இளைத்து விட்டாயே ...சரியாக சாப்பிடு" என்று
தன் மகனை அடிக்கடி சொல்லி
விட்டு உங்களை ஓரக் கண்ணில்
பார்ப்பது
- "நீ
இன்னும் வெயிட் குறைக்கணும்" என்று
உங்களை கலாய்ப்பது
- "லேன்ட்
லைனில் பேசு ...மொபைல் பில்
ஏறிடும்" என்று உங்களை கட்டுபடுத்துவது
- "என்
பேரன் பேத்திகளை சரியா கவனி ...எப்போதும்
உன்னையே பார்த்துக் கொண்டால் எப்படி?" என்று உங்களை எரிச்சலூட்டுவது
- உங்கள்
கணவரிடம் "இதை அவளிடம் சொல்லாதே"
என்று சில அல்ப ரகசியங்களை
உண்டாக்குவது
- "வர
வர உன் ட்ரெஸ்ஸே சரி
இல்லை" என்று கமெண்ட் அடித்து
உங்கள் மனதை காயப்படுத்துவது
- உங்கள்
குழந்தைக்கு என்ன உணவு எப்போது
கொடுக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வதை
"நானும் பிள்ளை வளர்த்திருக்கிறேன்" என்று நிராகரித்தல்
- நீங்கள்
பரிமாறும் போது உங்கள் உணவை
மட்டம் தட்டுவது - தனது ருசி போல
இல்லை என்று ...
- நீங்கள்
அருகில் வரும் சமயம் பார்த்து
சென்ட் அடித்து கொண்டு உங்களை
உற்று பார்த்து நிற்பது
- நீங்கள்
தேய்த்த பாத்திரத்தை மீண்டும் தேய்ப்பது
- நீங்கள்
மடித்த துணிகளை மீண்டும் மடிப்பது
- உங்களுக்கு
பிடித்த நாய்க்கு உணவு தராமல் கோபப்படுத்துவது
- நீங்கள்
சப்போர்ட் செய்யும் வேலைகாரப் பெண்ணை வேண்டும் என்று
திட்டுவது
- நீங்கள்
உங்கள் குழந்தைக்கு பாடம் சொல்லி கொடுத்தால்
"தானே பெரிய மேதாவி ...இவளுக்கு
பாடம் வேறா" என்று முணுமுணுப்பது
இப்படி
நீளும் பட்டியலில் உங்களை எப்படி காத்துக்
கொள்ளலாம் என்று யோசியுங்கள் .....!
No comments:
Post a Comment