Sunday, July 21, 2013

Few poetic thoughts



ஈரமில்லா மனமும் காய்ந்த பூமியும்
இங்கே பூமி அழுத போது
அங்கே அணை மூடப்பட்டது
அங்கே வானம் அழுத போது
அவசரமாய் அணை திறக்கப்பட்டது
______________________________________
நனைத்தேன் வந்தாய்
ஜலதோஷம்
நினைத்தேன் வந்தாய்
சந்தோஷம்
____________________________________
எச்சரிக்கை
குடையை விரி
பூக்கூடையாய் சிரி
நனைந்தால்
காதல் ஜுரம் கவ்வும்
____________________________
ஏய்
வானவில்லே  நனைந்து விடாதே
வண்ணங்கள்  சாயம் போகும்
வானத்துக்கு காயம் வரும்
________________________________
காருக்குள்
மழையும்
நானும்
நனையாமல் !
_________________________
மழை
நினைந்து பார்த்தால்
கிடைக்காது சுகம்
நனைந்து பார்த்தால்
கிடைக்கும் சுகானுபவம்
_________________________________________
காலி
வேலியே போலியென்றால்
பயிரெல்லாம் காலி தானே
கூலிகள் ஜாலியாயிருந்தால்
வயிரெலாம் காலி தானே
வாலியே பலமிழந்தால்
கவிபதவி காலி தானே ?
_______________________________________________

No comments:

Post a Comment