ஈரமில்லா மனமும் காய்ந்த பூமியும்
இங்கே
பூமி
அழுத
போது
அங்கே
அணை
மூடப்பட்டது
அங்கே
வானம்
அழுத
போது
அவசரமாய் அணை திறக்கப்பட்டது
______________________________________
நனைத்தேன் வந்தாய்
ஜலதோஷம்
நினைத்தேன் வந்தாய்
சந்தோஷம்
____________________________________
எச்சரிக்கை
குடையை
விரி
பூக்கூடையாய் சிரி
நனைந்தால்
காதல் ஜுரம் கவ்வும்
____________________________
ஏய்
வானவில்லே நனைந்து விடாதே
வண்ணங்கள் சாயம் போகும்
வானத்துக்கு காயம்
வரும்
________________________________
காருக்குள்
மழையும்
நானும்
நனையாமல் !
_________________________
மழை
நினைந்து பார்த்தால்
கிடைக்காது சுகம்
நனைந்து பார்த்தால்
கிடைக்கும் சுகானுபவம்
_________________________________________
காலி
வேலியே
போலியென்றால்
பயிரெல்லாம் காலி
தானே
கூலிகள் ஜாலியாயிருந்தால்
வயிரெலாம் காலி
தானே
வாலியே
பலமிழந்தால்
கவிபதவி காலி
தானே
?
_______________________________________________
No comments:
Post a Comment