வயதானவர்கள், வாழ்க்கையில் சாதித்தவர்கள் ஒவ்வொருவராக இவ்வுலகை விட்டு கிளம்புகிறார்கள்.
சாதித்த சிலருக்கு உரிய பாராட்டு அங்கீகாரம் இன்னும் நாம் கொடுக்காமல் இருந்திருக்கலாம் .
இருக்கும் போதே அந்த மரியாதை, விருது, பாராட்டு, அன்பு, நேசம், இவற்றை கொடுத்து விடுவோம்.
இழந்த பிறகு காலம் தாழ்ந்த அங்கீகாரம், பாராட்டு எல்லாமே பழங்கஞ்சி தான்
யோசிப்போமா ?
பொக்கிஷமாக நம்மோடு இன்னும் சிலர் இருக்கிறார்கள் ...நமது அதிர்ஷ்டம் ...உதாரணத்திற்கு
MSV சார், பாலமுரளி சார், பி சுசீலா, S ஜானகி, இப்படி கலை உலகில் ...இசை
உலகம், எழுத்து உலகம் (பாலகுமாரன், சிவசங்கரி,) விளையாட்டு உலகம் இந்த
பட்டியல் நீளும்.
அரசும், சமூக கலை அமைப்புகளும் இந்த நோக்கில் சிந்தித்து ஆவன செய்ய வேண்டும் ...
அதை விட நம் பெற்றோர் ஒரு வேளை சில சாதனைகளை, திறமைகளை வெளிக் காட்டாமல் இருந்திருக்கலாம் ...
DR M G பாஸ்கர் - என் நண்பர் அவரது தந்தை லயன் கோபு எழுத்துக்களை நூல் ஆக்கி வெளிக் கொணர்ந்தார்.
அது போல நீங்கள் என்ன செய்யலாம் யோசியுங்கள் ...
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி சாரை பாராட்ட வேண்டும் ...சிறந்தவர்களின் அன்னையை ஆண்டு தோறும் பாராட்டுகிறார்கள் ...!
இருக்கும் போது போற்றுவோம் ...பின்னாளில் ஆராதிப்போம் ...!
No comments:
Post a Comment