வாலி மறைந்தார் வலி நிறைத்தார் சினி உலகில்
வேலியில்லாத தோட்டங்களில்லை
கூலியில்லாத வேலையுமில்லை
மாலியில்லாத இசையுலகில்லை
கோலி ஆடாத குழந்தையுமில்லை
நூலிழையில்லாத சேலையுமில்லை
போலிகளில்லா பொருள்களுமில்லை
லாலி பாடாத தாய்களில்லை
வாலி இல்லாது இனி திரையிசை உண்டா ?
பட்டு ஜிப்பாக்கள் பலர் போடலாம்
பாட்டு வாலி போல் எவர் பாடுவார், எந்த மெட்டுக்கும் அவர் பாடுவார்
நாக்கு சிவக்க பலர் சிரிக்கலாம்
நாதம் மணக்க இனி யார் சிறப்பார் ? கவி உலகில் யார் பிறப்பார்?
எந்த வயதையும் வசம் இழுக்க
செர்ந்த வரிகளை இனி யார் எழுதுவார்
சினி உலகமே அழுகுது பார் !
நெற்றிப் பொட்டில் அடித்தது போல் பேசுவார்
நெற்றிப் பொட்டொடு நிதம் வலம் வருவார்
சுற்றி முற்றி பார்த்தாலும் சீன் சொன்னவுடன்
சற்றென பாடல் தர இனி யார் வருவார்
TMS PBS ராமமூர்த்தி முதலில் செல்ல
வால் போல தொடர்ந்து சென்றார் வாலி
தமிழ் திரையுலகிற்கு ஏன் அடி மேல் அடி
அமிழ்கின்ற ஆழியில் ஆடிடும் படகோ ?
நரம்பு மீட்டூம் நாத சங்கீதத்திற்கு
வரம்பு மீறாத வரிகள் தந்தவர் மறைந்தார்
மறைந்த பின் புலம்பல்கள் ஆயிரம் செய்தாலும்
மறையாது அவர் புகழ் தான் மகிமை அதுவே !
நிறைந்திடும் மனம் அவர் பாடல் கேட்டால்
இறைவா அக்கவி ஆன்மா அமைதி பெறச்செய் !
இறைவா அக்கவி ஆன்மா அமைதி பெறச்செய் !
- டாக்டர் பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment