Wednesday, May 4, 2016

Few innovative lines by Balasandilyan

Few innovative lines by Balasandilyan
அழகாய் மனமும் மாறினால்
அகமும் புறமும் மாறும்
மகிழ்வாய் இருக்கப் பிடிச்சிருக்கா ....
மகிழ்ச்சியை பிடுச்சி நிற்போம்

மகிழ்ச்சியாக இருக்கும் போது
தேவை இல்லாதவற்றை நினைக்க மாட்டோம்
தேவையானவற்றை கூட நினைக்க மாட்டோம்

கசக்கின பூவை தலைல வெச்சுக்கலாம்
கசக்கின ரூபா நோட்டை செலவு பண்ணலாம்
கசக்கிற வாழ்வை எப்படி மாற்றுவது
இனிமையானவர்களே யோசியுங்கள்

மகிழ்ச்சி உள்ளவர்கள் உலகில் இருந்தால்
சண்டை, கொலை, திருட்டு இருக்காது

விதை என்று தான் வெறும் விதை அல்ல
தனக்குள் ஒரு விருட்சம் உள்ளது என்பதை உணர்கிறதோ
அன்று வளர்ச்சி ஏற்படுகிறது

கரை புரண்டோடும் ஆற்றின் வெள்ளம்
அணை கட்டினால் விவசாயம்
அப்படியே விட்டால் சர்வநாசம்
அப்படித் தான் நம் அறிவும் ...
பயன்படுத்தா விடின் பாரம் ஆகும் ...

காதல்
அடையாளங்கள் நம்மை விட்டு
அகலலாம்
ஆழ் மனதில் வலி மட்டும் ஆனால்
அப்படியே

சின்ன சின்ன சண்டைகள் போட்டு
பெரிய பெரிய உறவுகளை இழப்பதா ?

பாசம் சொரிந்தாலும் அன்பு
விலை போவதில்லை
பூக்கள் எறிந்து இறைச்
சிலை சாய்வதில்லை
பாக்கள் சொரிந்திடின் அவன்
அருள் ஓய்வதில்லை

அன்பிருக்கும் இடத்தில் அச்சம் இருப்பதில்லை

சிலர் துணையோடு போகிறார்கள்
சிலர் துணையைத் தேடி போகிறார்கள்
சிலர் துணையைத் துரத்திப் போகிறார்கள்


வலி வந்தால்
டேப்லட் நேற்று
டேப்லட் வந்ததால்
வலி இன்று

No comments:

Post a Comment