Friday, May 18, 2018

Bala's little flash poems

உன்னோடு கைகோர்த்து
நடந்த போது தான்...அது
நடந்தது...
என் கடிகாரத்தில்
சின்ன முள்ளும் பெரியது போல்
சீறும் வேகத்தில்..!
உன்னை நினைந்து நினைந்து
பார்க்கும் போது தான்
நினைத்தேன் 
காப்பீடு
ஏன் எடுத்தேன் என்று...
ஆயுள் நீளும் என்பதை
மனது உறுதியாக சொன்னது..!!
- பாலசாண்டில்யன்

வாழ வேண்டும் என்பது
உயிர் நோக்கம்
சிறப்புடன்
வாழ வேண்டும் என்பது
உயர் நோக்கம்!!
இனிப்பு பிரச்சனையால்
இன்சுலின் சிக்கல்
கசப்பு பிரச்சனை என்றால்
'இன்'சொலின் சிக்கல்.
- பாலசாண்டில்யன்


சேதாரம் பற்றி
மகள் அம்மாவிற்கும்
மொபைல் பே பற்றி
மகன் அப்பாவிற்கும்
கணினி பற்றி 
மாணவன் ஆரிரியருக்கும்
கற்றுத் தந்தாலும்
எல்லாம் கற்றதாக நினைக்கும்
இளையவர்களுக்கு
இன்று யார் சொல்லித் தருவார் ?
ஒழுக்கம் மற்றும் பணிவு...!?
- டாக்டர் பாலசாண்டில்யன்


கரை புரண்டோடும் ஆற்றின் வெள்ளம்
அணை கட்டினால் விவசாயம்
அப்படியே விட்டால் சர்வநாசம்
அப்படித் தான் நம் அறிவும் ...
பயன்படுத்தா விடின் பாரம் ஆகும் ...


பாசம் சொரிந்தாலும் அன்பு
விலை போவதில்லை
பூக்கள் எறிந்து இறைச்
சிலை சாய்வதில்லை
பாக்கள் சொரிந்திடின் அவன்
அருள் ஓய்வதில்லை


யார் தொட்டாலும் சிகரம்
------------------------------------------
புல்வெளி காலுக்குள் சுகம்
சொல்வெளி காதுக்குள் புகும்
கட்டிப்பிடி காதல் புரியும் 
எட்டிப்பிடி வெற்றி தெரியும்
எடுத்து விடு உன்னைப் புரியும்
கொடுத்து விடு உலகைப் புரியும்
பேசிப் பார் அரங்கம் அதிரும்
யோசிப்பார் சுரங்கம் நிறையும்
அன்பாலே மனம் தொடு
அன்புக்கு சினம் விடு
- டாக்டர் பாலசாண்டில்யன்


No comments:

Post a Comment