Friday, May 18, 2018

Bala's Quick Stories

An interesting one-liner: Quick story 
மூணு வேளையும் டீ குடித்தே வயிறு நிரப்பும் ராமு சொன்னான், நல்ல வேளை சக்கரை சரியா இருக்கா என்று அப்பப்போ ருசி பார்க்கிறேன் இந்த வேலையில். இதற்கு முன்பு முடி வெட்டுற வேலை.

One liner - Quick story: வாடகை நூலகம் சென்ற இளைஞன் கேட்டான், தற்கொலை பற்றிய புத்தகம் இருக்கிறதா? கடைக்காரர் சொன்னார், இருக்கிறது, ஆனால், யார் அந்த புத்தகத்தை திருப்பித் தருவார்?!
- டாக்டர் பாலசாண்டில்யன்

One liner: Quick story
பாட்டிக்கு ஏண்டா பிறந்த நாள் பரிசா டிராக் சூட் வாங்கிக் கொடுத்தே என்று கத்திக் கொண்டு இருந்தார் ரமேஷின் தந்தை. அவன் சொன்னான், பாட்டி மட்டும் எனக்கு காயத்ரி மந்திரம் சிடி வாங்கித் தரலாமா?!
- டாக்டர் பாலசாண்டில்யன்

One liner - Quick Story:
டாக்டர் ஒரு நாள் வரவில்லை. கம்பௌண்டர் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள 'ஒரு நாள்' டாக்டர் ஆனார். உள்ளே அவசரமாக நுழைந்தார் ஒரு இளைஞர். 'டாக்டர் சார் எனது தந்தை உயிருக்கு போராடுகிறார், உடனே வந்து உதவுங்கள் '. புறப்பட்டு அவர் பின்னால் சென்றான்.. அப்போது தான் நினைவுக்கு வந்தது டாக்டர் கழுத்தில் மாட்டிக் கொள்ளும் அந்தக் கருவியை மறந்து போனதை. மாட்டிக் கொண்டோம் என்று பயந்தான். பயத்தோடு அந்த முதியவரைத் தொட்டான். அவர் 'டாக்டர் டாக்டர்' என்று முணுமுணுத்து கண் திறந்தார். இவனுக்கும் உயிர் வந்தது.
- டாக்டர் பாலசாண்டில்யன்

One liner, Quick story:
சாமுவேல் மறக்காமல் தனது மனைவி கல்லறைக்கு மலர் வளையம் வைத்து பிரார்த்தனை செய்வது வழக்கம். இது ஏழாவது ஆண்டு. தூக்கி வாரிப்போட்டது. ஏற்கனவே அங்கே ஒரு மலர் வளையம். யார் அந்த நபர்? பரபரப்பாக வந்த இளைஞன் ஒருவன், சாரி சார். எனது காதலி சமாதியில் அஞ்சலி செலுத்த வந்து பதட்டத்துடன் மாற்றி வைத்து விட்டேன்.. என்று தான் வைத்ததை எடுத்து விட்டு நகர்ந்தான். மேரி, ஒரு வினாடியில் உன்னை...! சாரி..!! அழுதான் சாமுவேல். மாறாத அந்த சந்தேகம்...?!
- டாக்டர் பாலசாண்டில்யன்

One liner - Quick Story:
கோபமாக பைக்கில் வந்து ஓர் இடத்தில் நிறுத்தி கண்ணாலே ஜாடை செய்து ஹும் என்றான். எதிரில் இருந்த அந்த லுங்கிக்காரன் அரிவாள் எடுத்து ஒரே சீவு. வெட்டிச் சாய்த்தான் . குபீர் என்று கொப்பளித்து வந்தது தண்ணீர். நாப்பது என்றான். வேறு வழியின்றி பணத்தைக் கொடுத்தான் இளநீரை வாங்கிக் கொண்டு.

One liner - Quick Story:
இந்த வினோதத்தை விபரீதத்தை எங்கு போய் சொல்ல? பல இடங்களில் நடந்தது தான் இந்த ஊரிலும் நடந்தது. இரவு வரை அவன் தான் காத்தான். இரவுக்குப் பிறகு இவன் தான் காத்தான். காலையில் காணோம். கடவுள் சிலை ஒன்றும் காவல் காப்பவனும்.
Dr. Balasandilyan

One liner - Quick Story:
சற்று அவசரம் தான். பாதுகாப்பும் மிக முக்கியம் ஆயிற்றே. என்ன செய்வது? யார் நமக்கு உதவுவார் ? நமக்கு நாமே தான் பொறுப்பு. நம்பிக்கை விடாமல் இடம் தேடி குறுக்கும் நெடுக்கும் அலைந்தது Anniyan அம்பியை போல. பிரசவ வேதனையில் பூனை.

One liner - Quick Story:
வீடே ரெண்டு பட்டுக் கொண்டு இருந்தது. அலுவலகத்தில் இருந்து சற்று முன்பு தான் நுழைந்திருந்த ராகுலுக்கு தலையும் காலும் புரியவில்லை. ஏன் தனது அம்மா இப்படிக் கத்தறாங்க, "உணமையச் சொல்... யார் அந்த வடையை தின்னது? அது எலி பிடிக்க விசம் தடவி வைத்திருந்தேன்...!" அது கேட்டவுடன் வாந்தி எடுக்க ஓடினான் எதிர்வீட்டுப் பையன் கிட்டு. ராமு அவனை அள்ளித் தூக்கி காரில் போட்டு ஆஸ்பத்திரி விரைந்தான். இப்போது டென்சன் டாக்டருக்கு...!
- Dr. Balasandilyan

One liner- Quick Story:
குழந்தைக்கு உடல்நிலை படுத்திக்கொண்டே இருந்தது. தெரிந்த பெரியவர் ஒருவர் வீடு வந்திருந்த பொழுது உங்களுக்கு மிகவும் பிடித்த இனிப்பு ஒன்று செய்து இறைவனுக்கு படையுங்கள். பிறகு சிலருக்கு அதை பிரசாதமாக விநியோகம் செய்யுங்கள். இதே போல ஏழு செவ்வாய் செய்யுங்கள் என்றார். இவளும் கேசரி செய்து 'அவன்' முன்பு வைத்து பிரார்த்தனை செய்தாள். கண் திறந்த போது கேசரி இல்லை. பறந்து போனது நம்பிக்கை. அன்றோடு நிறுத்தினாள் நைவேத்யம்.
- Dr/ Balasandilyan

One Liner - Quick Story by
Dr. Balasandilyan
அது ஒரு டிவி ரியாலிட்டி ஷோ. செமி பைனல் நிகழ்வில் அன்று டெடிகேஷன் ரவுண்டு. எல்லோரும் அம்மாவைப் பற்றி பாட வேண்டும். இவனும் பாடினான். இவனுக்கு மட்டுமே தெரியும் அவள் ஐ சி யு வில் இருப்பது. கொஞ்சம் கூட உணர்ச்சிவசப்படாமல் பாடினான். சுருதி சுத்தமாக இருந்தது அந்தப் பாடல். ஜட்ஜ் சொன்னார் சுருதி 'மாதா' உன் பாட்டில் ஒளிர்கிறாள். மிகப் பிரமாதம். அந்த தருணம் தனது அம்மா பிழைத்து விடுவாள் என்று புரிந்து கொண்டு மேடையில் அப்படியே விழுந்து வணங்கினான்.


No comments:

Post a Comment