Tuesday, May 8, 2018

சாலை பாதுகாப்பு வாசகங்கள்

சாலை பாதுகாப்பு வாசகங்கள் 
- டாக்டர் பாலசாண்டில்யன் 

வளைவில் முந்தாதே ....விளைவில் வருந்தாதே 

அதிக வேகம் ஆபத்தில் முடியும் 
ஆய்ந்து பார்த்தால் அர்த்தம் புரியும் 

சராசரி வேகமே நல்லது - அப்போது தான் 
நம் உயிர் நம்மது 

தலைக்கவசம் அணிவது விதி 
தவறினால் நடப்பது தலைவிதி 

விதிகளை மறந்த பயணம் 
விதியின் பயணம் மறக்காதே 

விவேகம் தருவது எதிர்காலம் 
வேகம் தருவது இறந்தகாலம் 

முகம் பார்க்க முந்துவதால் 
மிஞ்சுவது சோகம் 

முந்துவது வாழ்வில் இருக்கட்டும் 
வீதியில் எதற்கு 

No comments:

Post a Comment