Wednesday, July 13, 2022

ஷியாம் சின்ஹா ராய்

 ஷியாம் சின்ஹா ராய்

- நானி மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள வித்தியாசமான திரைப்படம்
படத்தில் பின்னூட்டமாக காட்டப்படும் பீரியட் பகுதிகள் கண்களுக்கு விருந்து. படத்தில் நானி மற்றும் சாய் பல்லவி இருவரின் ரெட்ரோ லுக் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது. சாய் பல்லவி சிவப்பு நிற சேலையில் ஆடுகிற ஒரு பாரம்பரிய நடனம் மிகவும் அற்புதம்.
சில கனவுகள் மற்றும் இலக்குகளை அடைய ஒரு ஜென்மம் போதாது என்கிற வினோதமான ஆனால் நாம் அனைவரும் நம்புகிற விஷயம் தான் கதையின் முக்கிய கரு.
பூர்வ ஜென்மத்தில் மிகச் சிறந்த கதாசிரியராக மற்றும் சமூக விஞ்ஞானியாகவும் வாழ்ந்த ஒருவரின் கோர மரணத்திற்கு பிறகு அவரே வேறு ஒருவராகப் பிறந்து சினிமா இயக்குனராக ஆகிறார். வெற்றிப் படம் தருகிற இயக்குனர், ஏற்கனவே எழுதி பிரபலமாக இருந்த எழுத்தாளரின் கதையை அச்சு அசலாக எடுத்து நகல் செய்கிறார் என்று அவர் மீது வழக்கு பதிவாகிறது.
அதில் இருந்து அவர் எப்படி மீள்கிறார், மற்றும் எப்படி அவரின் பூர்வ ஜென்மம் இருந்தது என்பது மிகவும் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டு இருக்கிறது.
நானி மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு அதியற்புதம். தேவ தாசிகளை மீட்டெடுக்கும் விஷயம் இந்த படத்தின் உயிர்நாடி. தவிர, தீண்டாமை, சாதி இன பேதங்கள் இவற்றை உடைத்தெறியும் கதாபாத்திரமாக வருகிறார் நானி.
ஒரு கம்யூனிஸ்ட் ஆக வலம் வருகிற கதாநாயகன் நமக்கு மகாகவி பாரதியாரை நினைவூட்டுகிறார். மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் கதாபாத்திரம்.
வார்த்தையே வாழ்க்கை என்று வாழ்ந்த எழுத்தாளர்கள் மிகவும் குறைவு. அப்படிப்பட்ட ஓர் எழுத்தாளரின் கதை இது.
நான் மிகவும் ரசித்தேன். எனக்கு மரோசரித்ரா, சங்கராபரணம், சலங்கை ஒலி போன்ற படங்கள் நினைவுக்கு வந்து போயின.

No comments:

Post a Comment