https://www.youtube.com/watch?v=WhxZ5XnG99s
Tuesday, July 29, 2025
சதுரங்க விளையாட்டில்...
பகல் இரவென்று
கறுப்பு வெள்ளை
உண்டு வாழ்க்கை
சதுரங்க விளையாட்டில்...
இக்கட்டான
போராட்டம் தான்....
எதிர் வரும் ஒவ்வொரு
மனிதனும் யானை குதிரையே...
வெட்டி வீழ்த்துவோருடன் தான்
நமது அன்றாடப் பயணம்...
குறுக்கே நகர்ந்தால் என்ன
நேரே நகர்ந்தால் என்ன
ஆபத்தான கட்டமைப்பே சமூகம்...
ஒரு ராஜா ஒரு ராணி என்ற விதியில்
நாமெல்லாம் சிப்பாய்கள் தான்...
ஒரு சில சிப்பாய்கள்
கடைசி வரை போராடி
ராணி ஆவதுண்டு...
விதிவிலக்கு பற்றிய பேச்செதற்கு?..
சக்தி காட்டும் ஒன்றுக்கு பலியாகி
வெட்டுண்டு வீழ்வதே விதி...
ஆட்டம் முடிந்த பின்னர்
சதுரங்க விளையாட்டில்
எல்லா காய்களும் ஒரு பெட்டியில்
போவது போல நாமும்
இறுதியில் எல்லோரும் சமமென்பதாக
அடக்கமாவோம் ஒரே பூமியில்...
காய் நகர்த்தி காத்திருக்கிறேன்
உங்கள் அடுத்த நகர்வுக்கு...
- பாலசாண்டில்யன்
Tuesday, July 22, 2025
vaa vaa anbe vaa my song in video format
https://www.youtube.com/watch?v=soC25GrvZE4
Tujhse yaar kar liya hai
இது மொழிபெயர்ப்பு அல்ல...
தமிழில்: பாலசாண்டில்யன்
இசை : ai தொழில் நுட்பம்
ஆக்கம் மற்றும் வீடியோ ஆக்கம் : உமாகாந்த்
வா வா அன்பே வா
வா வா அன்பே வா
உனை நினைத்து விட்டேன் ஓ
உனை நினைத்து விட்டேன்
பண்ணின் வரிகள் போல
மனதில் நிலைத்து விட்டாய்
பண்பாடு முறைகள் போல
உனை நினைத்து விட்டேன்
பண்ணின் வரிகள் போல
கடைசி மூச்சு வரை நிலைக்கும்
பழக்கவழக்கங்கள் போல
இது நம் காதல் வாழ்வானது ...அதனை
ஒவ்வொரு தருணமும் வாழ்கிறேன்
இது விதியின் விளையாட்டு
உலகமிதைக் காதலென்கிறது
என் வாழ்க்கை என் மனது
உலகே ஒரு சொல்லில் அடக்கம்
நீயென் மனதின் ஆறுதல்
நீயென் இதயத்தில் அன்பில்
வழிமுறையாய் மாறிவிட்டாய்
பல பண்டிகைகளை தவறிவிட்டேன்
பெருங்கொண்டாட்டம் இழந்து விட்டேன்
பலரும் உன் பெயரை உச்சரிக்கிறார்
வழிபாடு போல நிறைவான
தியானம் போல ... அதனால்...
உனை நினைத்து விட்டேன் ஓ
உனை நினைத்துu விட்டேன்
பண்ணின் வரிகள் போல
பண்பாடு முறைகள் போல...
My composition in Music academy sung by Sunil Gargyan
https://www.facebook.com/Sunilgargyan/videos/1516499409133830
காலம் சொல்லும் பதில்
காலம் சொல்லும் பதில்
தமிழுக்கு உரமுண்டு
தழுவிட கரமுண்டு
தாமதம் செய்யாது
அருகே வா முன்பே
எந்நாளும் நன்னாளே
இருளென்றும் நீளாது
சஞ்சலமேன் கண்ணே
நன்மைபல செய்து விட
துன்பங்கள் மாறும்
கலவரம் இனியேது
எண்ணங்கள் வரும்போகும்
எழுந்திரு இனிதாக
காற்றும் மழையும்
எல்லோர்க்கும் ஒரு சுகம்
காடும் மரமும்
கண்களுக்கு புது வரம்
நில்லாது சுழலும் பூமி
நிம்மதி தரும் சாமியே
கம்பியிட்டு தடுத்தாலும்
காதல் மாறாதம்மா
காலம் பதில் சொல்லுமே
கல்லுக்குள் கடவுளுண்டு
கணமொன்றில் புரிந்தால்
கவலைகள் பறந்தோடும்
கனவுகள் நனவாகுமே
- பாலசாண்டில்யன்
உன் ஸ்பரிசம் என் சுவாசம்
உன் ஸ்பரிசம் என் சுவாசம்
ரோஜாக்களின் நறுமணம் அன்புப்
பாதையில் வீசுகிறது
ராப் பகலும் விடாமல் உன் குரலே
என்னோடு பேசுகிறது
உன் குரல் என்னை சிலநேரம்
தட்டி எழுப்புகிறது
உன் விரல் ஸ்பரிசம் போல்
ரகசியமா யழைக்கிறது
அலைக்கற்றை போல் அலையும்
உன் சிரிப்பென்பது
அலைகள் போல் ஓசையெழுப்பி
தூக்கம் கலைக்கிறது
ஏன் ஒவ்வொரு சந்திப்பும் வலி
பிரிவிலியே முடிகிறது
இந்தக் கேள்வி தான் வந்து வந்து
மனதைத் துளைக்கிறது
வாழ்க்கை உன்னோடு சேரும்
ஒவ்வொரு நாளும்
வானின் நிலவை விட இந்த பூமி
அழகாய்த் தோன்றுகிறது
- பாலசாண்டில்யன்
Subscribe to:
Posts (Atom)
