பகல் இரவென்று
கறுப்பு வெள்ளை
உண்டு வாழ்க்கை
சதுரங்க விளையாட்டில்...
இக்கட்டான
போராட்டம் தான்....
எதிர் வரும் ஒவ்வொரு
மனிதனும் யானை குதிரையே...
வெட்டி வீழ்த்துவோருடன் தான்
நமது அன்றாடப் பயணம்...
குறுக்கே நகர்ந்தால் என்ன
நேரே நகர்ந்தால் என்ன
ஆபத்தான கட்டமைப்பே சமூகம்...
ஒரு ராஜா ஒரு ராணி என்ற விதியில்
நாமெல்லாம் சிப்பாய்கள் தான்...
ஒரு சில சிப்பாய்கள்
கடைசி வரை போராடி
ராணி ஆவதுண்டு...
விதிவிலக்கு பற்றிய பேச்செதற்கு?..
சக்தி காட்டும் ஒன்றுக்கு பலியாகி
வெட்டுண்டு வீழ்வதே விதி...
ஆட்டம் முடிந்த பின்னர்
சதுரங்க விளையாட்டில்
எல்லா காய்களும் ஒரு பெட்டியில்
போவது போல நாமும்
இறுதியில் எல்லோரும் சமமென்பதாக
அடக்கமாவோம் ஒரே பூமியில்...
காய் நகர்த்தி காத்திருக்கிறேன்
உங்கள் அடுத்த நகர்வுக்கு...
- பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment