உன் ஸ்பரிசம் என் சுவாசம்
ரோஜாக்களின் நறுமணம் அன்புப்
பாதையில் வீசுகிறது
ராப் பகலும் விடாமல் உன் குரலே
என்னோடு பேசுகிறது
உன் குரல் என்னை சிலநேரம்
தட்டி எழுப்புகிறது
உன் விரல் ஸ்பரிசம் போல்
ரகசியமா யழைக்கிறது
அலைக்கற்றை போல் அலையும்
உன் சிரிப்பென்பது
அலைகள் போல் ஓசையெழுப்பி
தூக்கம் கலைக்கிறது
ஏன் ஒவ்வொரு சந்திப்பும் வலி
பிரிவிலியே முடிகிறது
இந்தக் கேள்வி தான் வந்து வந்து
மனதைத் துளைக்கிறது
வாழ்க்கை உன்னோடு சேரும்
ஒவ்வொரு நாளும்
வானின் நிலவை விட இந்த பூமி
அழகாய்த் தோன்றுகிறது
- பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment