Sunday, March 3, 2013

Dr Balasandilyan's recent rain spots in Tamil

டாக்டர் பாலசாண்டில்யனின் கவிதை சிதறல்கள்

கண்கள் உன்னை உன் உலகத்தை
காட்டியது ....ஆனால்
கண்ணீர் உன் உள்ளத்தை வெளிக்காட்டியது
___________________________________________

உன் இமைகள் பேசினால் கல கல
உன் இதழ்கள் பேசினால் வள வள
_____________________________________

பைக் என்றால் ஹீரோ
ஷர்ட் என்றால் சீரோ
நான் மட்டும் ஏன் உனக்கு 'யாரோ'
__________________________________________

சிங்கிள் என்றதும்
தேநீர் வந்தது
டபுள்ஸ் என்றதும்
காதல் வந்தது
_______________________________

பாவி என்றழைத்தாள்
கோபம் வந்தது
அப்பாவி என்ற போது
பரிதாபம் வந்தது
அடப்பாவி என்ற போது
காதல் வந்தது
_________________________

என் காதலுக்கு
கண் இல்லை
வேண்டும் எனக்கு
பார்வை உந்தன்
கடைக்கண் பார்வை !
__________________________________

மலர் விட்டு மலர் தாவலாம்
தேன் தனை சேகரிக்க
மனம் விட்டு மனம் தாவலமா
காதல் தனில் பூரிக்க !
__________________________________

பாக்க பாக்க பிடிக்கும்
தனுஷ் போன்றவர்கள்
கேக்க கேக்க பிடிக்கும்
ரஹமான் பாடல்கள்
சேக்க சேக்க பிடிக்கும்
காசு பணங்கள்
தோக்க தோக்க பிடிக்கும்
வெற்றிக்கான வெறிகள் ..!

No comments:

Post a Comment