ஆசையில் ஒரு கனவு ! அவிழ்ந்தது ஒரு முடிவு !
கைப்புறா பிரிந்து
கண்ணெதிரில் பறந்தது
தனக்குக் கீழ்
வேர்
இருப்பதை
தானுணரா மரத்தின் கீழ்
அமர்ந்தேன்
நின்று
போன
யாகத்தின் இடையில்
கையில்
எஞ்சிய
நீரை
கடலில்
விட்டேன்
கைகளிரண்டும் தலையணையானது
பச்சைப்புல்வெளி படுக்கையானது
காற்று
உணவு
குறையலானது
வானக்
கூரையின் கீழ்
ஆழ்நிலை த்யானம்
வானப்ரஸ்தம் இது
தானோ
?
நகர்ந்தது மேகம்
!
கலைந்தது யோகம்
!!
சரிந்தது தேகம்
!!!
கரைந்தது காகம் !!!!
No comments:
Post a Comment