மால்குடி என்றால் அது நாராயணன்
லால்குடி என்றால் அது ஜெயராமன்
இசைப்பது விரல் என்றாலும்
கேட்பது குரலாக இருக்கும்
அதுவே அவர் வாசிப்பின் சிறப்பு
ரஷ்யாவில் இவர் செய்த வில் வித்தை
யஹுதியின் இத்தாலிய வயலின் பெற்றுத் தந்தது
இவர் செய்த பல வர்ணம் இசைக்கு புது வண்ணம் சேர்த்தது
இவர் செய்த பல கிருதிகள் இசைக்கு பாமாலை ஆனது
இவர் செய்த பல தில்லானாக்கள் பல சலங்கை அசைக்க வைத்தது
ஜெயஸ்ரீ,விஷாகா ஹரி, விட்டல், பத்மா, ராம் என
சீடர்கள் பலரை உருவாக்கிய மாகுரு மறைந்தார்
செய்தி அறிந்த போது கண்கள் கசிந்தது
உலகெலாம் தென்னிந்திய இசை தனை
கொண்டு சென்ற வயலின் தூதுவன் காவிரி படுகையின் இசை வயல்
விருதுகள் இவரால் பெருமையுற்றன
விரல்கள் இவருக்கு பெருமை சேர்த்தன
பஞ்சேச்வரம் நாட்டிய நாடகம் செய்த இவர் வயது
பன்னிரண்டில் இசைப் பயணம் தொடங்கினார்
ஜெய ஜெய தேவி நாட்டிய இசை செய்தவர்
ஜெய ஜெய என்று சொல்லி இறைவனடி சேர்ந்தார்
முடிவிலா இவர் தம் இசைப்பணிக்கு முடிவில்லை என்றும்
முடிசூடா இசை மன்னர் லால்குடி நம் செவிகளில் வாழ்வார் என்றும்
- இசைப்பித்தன் டாக்டர் பாலசாண்டில்யன்
லால்குடி என்றால் அது ஜெயராமன்
இசைப்பது விரல் என்றாலும்
கேட்பது குரலாக இருக்கும்
அதுவே அவர் வாசிப்பின் சிறப்பு
ரஷ்யாவில் இவர் செய்த வில் வித்தை
யஹுதியின் இத்தாலிய வயலின் பெற்றுத் தந்தது
இவர் செய்த பல வர்ணம் இசைக்கு புது வண்ணம் சேர்த்தது
இவர் செய்த பல கிருதிகள் இசைக்கு பாமாலை ஆனது
இவர் செய்த பல தில்லானாக்கள் பல சலங்கை அசைக்க வைத்தது
ஜெயஸ்ரீ,விஷாகா ஹரி, விட்டல், பத்மா, ராம் என
சீடர்கள் பலரை உருவாக்கிய மாகுரு மறைந்தார்
செய்தி அறிந்த போது கண்கள் கசிந்தது
உலகெலாம் தென்னிந்திய இசை தனை
கொண்டு சென்ற வயலின் தூதுவன் காவிரி படுகையின் இசை வயல்
விருதுகள் இவரால் பெருமையுற்றன
விரல்கள் இவருக்கு பெருமை சேர்த்தன
பஞ்சேச்வரம் நாட்டிய நாடகம் செய்த இவர் வயது
பன்னிரண்டில் இசைப் பயணம் தொடங்கினார்
ஜெய ஜெய தேவி நாட்டிய இசை செய்தவர்
ஜெய ஜெய என்று சொல்லி இறைவனடி சேர்ந்தார்
முடிவிலா இவர் தம் இசைப்பணிக்கு முடிவில்லை என்றும்
முடிசூடா இசை மன்னர் லால்குடி நம் செவிகளில் வாழ்வார் என்றும்
- இசைப்பித்தன் டாக்டர் பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment