Wednesday, February 12, 2020

சொல் அந்த ரகசியம் அழகே


அப்படி என்ன ரகசியம்
ஒளித்து நிற்கிறாய்
உன் கண்களில் உலகை
ஈர்த்து நிற்கிறாய்
உன்னை விடவும்
அழகு... கண்ணே
உன் கருணைப்
பார்வையே அடடா (அப்படி )

உனது ஒரு பார்வையில்
மொட்டும் மலர்கின்றது
உனது மறு பார்வையில்
கரைகளும் சேர்கின்றது
உனது மௌனத்தில் கூட
உன் குரல் கேட்கின்றது
உனது கண்ணசைவில்
உலகே விழிக்கின்றது (அப்படி )

உனது பேச்சில் குறும்பொன்றும்
பெரிதாய் இல்லை
உனது பார்வையில் துஷ்டத்தன
மேதுமில்லை
உனது அசைவில் போலிப்
பாராட்டு கூட இல்லை - ஆனால்
உனது கண்களில் ஏதோ
ரகசியம் உண்டு அடடா (அப்படி)

- பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment