Saturday, February 8, 2020

எனது தவம் எனது வரம்



எனது பிரார்த்தனை 
இனிதே இன்று ஆனது 
நான் கேட்டது 
நான் கேட்டது என்னவென்று 
அவனே குழம்பிப் போனான் 

நிலவை எந்தன் கையில் கேட்டேன் 
நினைக்கும் முன்பே உன்னைத் தந்தான் 
இறைவன் என்றால் அது 
இவன் தான் அன்றோ ...என்ன கருணை 

வலியின் இருளை மாற்றி எனக்கு 
ஒளியின் வெளியை காட்டி நின்றான் 
கண்ணின் காட்சி உண்மையா என 
காதல் இதயம் துடிக்க வைத்தான் 

இரண்டு இதயம் துடிக்கும் சமயம் 
எந்தன் மனமோ கடக்கும் இமயம் 
புரண்டு பார்த்தேன் கனவு இல்லை 
புதையல் நீ தான் பிரமிப்பின் எல்லை 

நன்றி நன்றி என ஆர்ப்பரித்தேன் 
நல்லது என அவனும் சிரித்தான் 
எனது பிரார்த்தனை இனிதே ஆனது - இனி 
ஏதும்  வேண்டாம் மனது சொன்னது 

- பாலசாண்டில்யன் 

No comments:

Post a Comment