Monday, November 29, 2021

சிகிச்சை

 

சிகிச்சை 

 

ராஜனுக்கு வயது 75 இருக்கும். எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாமல் வாழ்ந்து வந்தார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அருகில் இருக்கும் கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வாழ்வியல் மதிப்புகள் பற்றிய போதனைகளை சொல்லிவிட்டு வருவார். தினமுமே மனைவி செல்லத்திற்கு தன்னால் இயன்ற உதவிகள் செய்வார். உறவினர்கள் வீட்டிற்கு சில சமயம் சென்று வருவார்

 

ஒரே பையன் மஹேஷுக்கு வெளியூரில் வேலை. அவ்வப்போது வெளிநாடும் சென்று விடுவான்

 

ஒரு சமயம் தனது பையன் ஊரிலிருந்து வந்திருந்த சமயம் வெகுநேரம் காலை பேசிக் கொண்டிருந்து விட்டு தாமதமாக குளிக்கச் சென்றார். வெளியில் வரும் போது யாரோ தள்ளியது போல உணர்ந்து இடுப்பில் துண்டுடன் கட்டிலில் அமர்ந்து கொண்டார். சில நிமிடங்களில் கண்கள் சொருகியதுமனைவி செல்லமும் மகன் மகேஷும் அவரை அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்து கொண்டு சென்றனர்

 

ராஜனை உள்ளே ஒரு ஸ்ட்ரெச்சரில்  போட்டு தள்ளிக் கொண்டு விரைந்தனர். செல்லம் அழுத வண்ணம் நின்று கொண்டிருந்தாள். மகேஷ் தனது மாமாவிற்கு போன் செய்து விட்டு, அப்பா அட்மிஷன் செய்திட அங்கே கொடுத்த பேப்பரில் எழுதிக் கொடுத்து விட்டு ஒரு லட்சம் ரூபாய் முன்பணமும் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டான்.

 

அடுத்த அரை மணி நேரத்தில் ராஜன் பொட்டலம் கட்டப்பட்டு சடலமாக வண்டியில் ஏற்றப்பட்டார். அதற்கு காரணம் இருந்தது. மகேஷ் இது அறியாமல் கண்ணை மூடி பிரார்த்தனையில் இருந்தான்.

 

அங்கே மகேஷின் மாமா - ஒரு சமூக ஆர்வலர் மற்றும் ஒரு பத்திரிகையாளர்தனது அடையாள அட்டையைக் காண்பித்து விட்டு உள்ளே நுழைந்து விட்ட போது ஓரிரு  நர்சுகள், மற்றும் இரண்டு டாக்டர்கள் ராஜனை நெஞ்சில் குத்திக்கொண்டு இருந்தனர். ஒரு ஊசியும் போட தயாராக இருந்தனர்

 

மகேஷ் அவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு நடப்பது என்ன என்ற விபரம் கேட்ட போது புரிந்து கொண்டார்  ராஜன் அங்கே கொண்டு வரும் போதே இறந்து விட்டார் என்று. மருத்துவமனை ஊழியர்கள் மேற்கொண்டு எதுவும் செய்யாமல் தமது வழக்கமான பணியை  முடித்துக் கொண்டனர்.

 

தட்டிக் கேட்காவிட்டால் சடலத்துக்கு மருத்துவ சிகிச்சை அளித்து குறைந்தது ஒரு வாரம் கடத்தி பெரியதொரு பில் கொடுத்திருப்பர்.

 

நடந்திருக்க வேண்டிய சிகிச்சையை மகேஷ் வழங்கியதால் மகேஷுக்கு மீதி பணம் கூட கிடைத்தது

 

 

 

No comments:

Post a Comment