ஓரிக்கை சென்று ஒரு கணம் தொழுதால்
கோரிக்கை நிறைவேறுமே - குருவின்
அற்புதம் நிஜமாக்குமே
பாரினில் குருவென்றால் சந்திரசேகரரே
- இனி அவர் போலே
யார் வருவார் பக்தர்கள் இன்னல் களைந்திடவே (ஓரிக்கை)
வாடிக்கை மனிதர்கள் வாழ்வினிலே அவர்
வளங்கள் பல சேர்த்தார் - ஒரு
வேடிக்கையாகவே ஜாலங்கள் பல செய்து
வேதனைகள் போக்கி நின்றார்
(ஓரிக்கை)
நடராஜனின் வடிவமாய் நடமாடிய தெய்வமாய்
நம்பினோர்க்கருள் புரிந்தார்- பல
தடம் மாறிய பக்தரும் தாள் பணிந்தே நிதம்
தயைகொடு சங்கரா எனத் தொழுதார்
தாங்கொணா மகிழ்ச்சியில் ஆனந்தமாய்த் தாம் அழுதார்
(ஓரிக்கை)
- பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment