Tuesday, November 23, 2021

குருவின் அற்புதம்

 ஓரிக்கை சென்று ஒரு கணம் தொழுதால்

கோரிக்கை நிறைவேறுமே - குருவின்

அற்புதம் நிஜமாக்குமே

பாரினில் குருவென்றால் சந்திரசேகரரே
- இனி அவர் போலே
யார் வருவார் பக்தர்கள் இன்னல் களைந்திடவே (ஓரிக்கை)

வாடிக்கை மனிதர்கள் வாழ்வினிலே அவர்
வளங்கள் பல சேர்த்தார் - ஒரு
வேடிக்கையாகவே ஜாலங்கள் பல செய்து
வேதனைகள் போக்கி நின்றார்
(ஓரிக்கை)

நடராஜனின் வடிவமாய் நடமாடிய தெய்வமாய்
நம்பினோர்க்கருள் புரிந்தார்- பல
தடம் மாறிய பக்தரும் தாள் பணிந்தே நிதம்
தயைகொடு சங்கரா எனத் தொழுதார்
தாங்கொணா மகிழ்ச்சியில் ஆனந்தமாய்த் தாம் அழுதார்
(ஓரிக்கை)

- பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment