Saturday, May 4, 2013

நெஞ்செரிச்சல் இன்று பிராதன பிரச்சனை !
பல்வேறு காரணங்களால் உண்டாகிற இந்த சிக்கலுக்கு உட்பட்டு பலர் இன்று தவிக்கின்றனர். அதிக காரமான, வறுத்த, பொரித்த, மசாலா உணவுகளே முக்கிய காரணம் எனலாம். மன உளைச்சல், மது, புகைத்தல், தூக்கமின்மை, சில ஒவ்வாத உணவுகள், இயல்பான அஜீரண கோளாறுகள் இவையும் இந்த பட்டியலில் உண்டு.
சரி சரி மேல சொல்லு என்று எரிச்சல் படுகிறீர்களா? இதோ சில யோசனைகள் :
- தினம் ஒரு வாழைப்பழம் இந்த சிக்கலுக்கு ஒரு அருமருந்து
- வேகமாக உண்ணுதல், மென்று உண்ணாதிருத்தல் தவிர்த்தல் வேண்டும்
- மூன்று பெரிய உணவுகளுக்கு பதிலாக நான்கு அல்லது ஐந்து முறை சிறு சிறு அளவு உணவு எடுத்துக் கொள்ளுதல் உதவுகிறது என்கின்றனர் மருத்துவர்.
- ஊறுகாய், கடுகு, வினிகர், சாக்கலேட், அடிக்கடி டீ காபி, சிட்ரஸ் பழ ரசங்கள், இவை நெஞ்செரிச்சல் அதிகமூட்டுகிறது. எனவே கொஞ்சம் ப்ரேக் போடுங்கள்
- சாலட் (பச்சை வெங்காயம், முள்ளங்கி) தவிர்க்கலாம்
- தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடித்தால் நல்லது
- சாப்பாட்டுக்கு முன்னால் தண்ணீரில் ஓரிரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தல் நல்லது
- துளசி இலைகள் ஓரிரண்டை அவ்வப்போது மெல்லுவது கூட நல்லது
- சிறு வெல்ல கட்டி வாயில் அடக்கி கொள்ளுதல் கூட உதவும்
-  சாப்பாட்டிற்கு பிறகு ஏலக்காய் துகள்கள் மெல்லுவது சிலருக்கு உதவும்
- வெள்ளரிக்காய், தர்பூசணி, வாழைப்பழம், இந்த சிக்கலுக்கு பெரிதும் உதுவுகின்றன
- பால், இளநீர் இரண்டும் கூட நிச்சயம் நல்லது தான்.
- ஒவ்வொரு முறை சாப்பாட்டிற்கு பிறகும் புதினா ஜூஸ் மிகவும் நல்லது
- சாப்பாட்டிற்கு பிறகு கூல் ட்ரிங்க்ஸ் கூடவே கூடாது. சீனர்கள்  மற்றும் ஜப்பானியர்கள் உணவுக்கு பிறகு கிரீன் டீ அல்லது ப்ளாக் டீ குடிப்பதை பார்த்திருப்பீர்கள் ...!
எரிச்சல் தவிர்ப்போம்...இன்பமாய் இருப்போம் !

No comments:

Post a Comment