Thursday, May 23, 2013

some latest expressions of mine

அம்மா இறந்து விட்டாள்

அனைத்து சொந்தமும் வந்து சேர்ந்தன
மருமகளைப் பார்த்து நாத்தி கேட்டாள்
அம்மா போட்டிருந்த தோடு எங்கே ?
மருமகள் சொன்னாள்
தோடு அவிழ்த்த விஷயம் மறைத்து
"அம்மா எதுவும் வேண்டாம் என
எப்போதோ கழட்டி வைத்தாள் ...
எங்கென்று தெரியாது எனக்கு !"
அம்மா போன சோகம் மறைந்து போனது
தோடு போன சோகம் கவ்விக் கொண்டது
நாத்தி மனசெல்லாம் ....!
தோடுடைய செவியன் பாதம்
சென்றடைந்த அம்மா மேலிருந்து சிரித்தாள் !
 ____________________________________________________ 
எலும்பில்லாத நாக்கு
வரம்பில்லாது பேசலாமா ?
மிருதுவான இதயம்
எருது போல் கனமாகலமா ?
_____________________________________________________
 மனதில் சந்தோஷம் தவிர
வேறு தோஷம் வேண்டாம்
சந்தோஷம் மனதில்
மழையும் தென்றலும் தரும் !
___________________________________________________
 அருவி

ஏமாற்றம் ஏதும் இல்லை
காதல் தோல்வி இல்லை
கால் இடறவில்லை
கல் தடுக்கவில்லை
யாரும் தள்ளி விடவில்லை
யாரும் விழச் சொல்லவில்லை
இருந்தும் மலை உச்சியிலிருந்து
விழுகிறேன் அதள பாதாளத்தில் ....!
_______________________________________________

No comments:

Post a Comment