Saturday, May 11, 2013

Some More Haiku Poems written by me...!

டாக்டர் பாலசாண்டில்யன் எழுதிய ஹைக்கூ கவிதைகள் 
மின்தடை 
சமயம் 


அதே நேரம்
பழகிய தேகம்
ஓடாத கடிகாரம்
 ________________
கூடங்குளம்
படகுகள் ஓய்வு
மீன்கள் கலவரம்
மின்சாரம் அணு ஓரம்
__________________________
அன்னா ஹசாரே
உறங்கிய பசி
ஊழல் விழிப்புணர்வு
எழுச்சியில் தேசம்
___________________________
தொந்தரவு
பக்கத்தில் குறட்டை
பறந்த தூக்கம்
பாவமாய் நான்
____________________________
வெறுப்பு
ஒற்றை செறுப்பு
அலைந்த கண்கள்
கோவில் வாசல்
______________________________
மனுசுக்குள்
மெட்டி ஓசை
மல்லிகை வாசம்
மனைவி வருகை
_________________________________
என்னவள்
மேகத்தின் நடுவே
எட்டிப் பார்க்கும் நிலா
காணவில்லை அவள்
______________________________
படபடப்பு
பட பட பட
தட்டப்படும் கதவு
நுழைந்தது காற்று
______________________________________
தேதி பார்த்தேன்
ஆடிய காலண்டர்
மூடிய சமையலறை
இன்று விடுமுறை
_____________________________________________
மன ஓசை
நீட்டிய கை
கண்ணில் பட்ட மோதிரம்
பிச்சைக்காரன்
______________________________________________
இது சீசன்
ஆட்ட மைதானம்
ஒளி உமிழும் விளக்குகள்
ஒத்து ஊதும் நிலா மேலே !
__________________________________________
ஏமாற்றம்
காத்திருந்த காதுகள்
ஒலித்தது தொலைபேசி
புரியாத மொழியில் விசாரிப்பு
____________________________________________
கிளிப்
பரந்த முடி
கலைந்த மனம்
ஒன்றிணைத்த சிறு பிடி
_________________________________________________
டிரைவர் மனஒலி 
அடுத்த சிக்னலுக்குள்
திறந்து கொள்வாயா 
என் விழிகளே !
___________________________________________________


No comments:

Post a Comment