பாலசாண்டில்யனின் ஹைக்கூ கவிதைகள்
விலைவாசி
குளங்கள் வற்றியதால்
குளங்கள் வற்றியதால்
கொக்கெல்லாம்
மீனைப்
போல்
சந்தையில்
______________________________
முதிர்கன்னி
ஜன்னலுக்கு இரு
கண்
தானம்
தந்தது
யார்
அக்கா
தான்
______________________
விவசாயக்கூலி
போரடித்தாள் முறமசைத்தாள்
தவிட்டு மடியில்
பசிச்சுமை அந்தோ
___________________________
மாணவன்
பரீட்சை சோகமும்
காலைச்
சிற்றுண்டியும்
முட்டையோடு தான்
_______________________________
அவள்
கறுப்பின் மேல்
வெள்ளை
கொள்ளை
அழகு
கூந்தல் செடியில் ரோஜா
_____________________________________
சந்தேகம்
காசு
கொடுத்தவன்
தலையிலேயே கை
யானை
___________________________
வாடிக்கை
கன்னம்
வைத்தான்
களவு
போனது
காதல்
இதயம்
_____________________________
வியப்பு
போடும்
போது
பச்சை
போட்ட
பிறகு
சிவப்பு
வெற்றிலை
______________________________
மாற்றம்
அக்காவுக்கு ஜீன்ஸ்
அவள்
சீலை
உனக்கா
ஜன்னல்
____________________________
வினோதம்
கண்டு
நடுங்கினாள் மனைவி
பொறாமையோடு கணவன்
கரப்பான்பூச்சி
_____________________________
காரணம்
மிரண்டு போனது
சிறுமி
மதில்
மேல்
மீசைக்காரன்
பூசணிக்காய்
_________________________
ஞாபகம்
அழகான
டப்பா
திறந்ததும் சிரித்தது
பாட்டியின் பல்செட்
_____________________________________
அநியாயம்
அஸ்திவாரம் ஆரவாரமாய்
வளர்ந்தது வேகமாய் புதுவீடல்ல
கடனுக்கு வட்டி
________________________________
பாவம்
அறுபதைத் தொட்ட
அப்பா
அழகாய்
ஈசி
சேரில்
....அம்பது
தாண்டிய அம்மா
அடுப்படியில் இன்னும்
____________________________________
விதி
அழகு
மனைவி
சமூகசேவகி
அடுப்புக்கரி
அம்மா
முகத்துக்கு மட்டும்
___________________________________
கவலை
கண்களுக்கு சொந்தம்
கண்ணீர் மட்டுமா
கைக்குட்டையும் தான்
கண்ணீர் மட்டுமா
கைக்குட்டையும் தான்
____________________________________
ஏழை
வானமே அழு
வானமே அழு
என்
குடையை
தைத்த
பின்
அழு
வானமே
_______________________________
வியப்பு
மழை
நின்ற
பிறகும்
மழை
மரத்தடியில் ...!
________________________________
ஓலம்
தெருவில் வெள்ளம்
அணைந்தது அடுப்பு
பசி
தீ
தானே
_________________________________
அக்கப்போர்
நாய்களின் சண்டை
குப்பைத்தொட்டி அருகே
ஜெயித்தான் மனிதன்
__________________________________
அறிவு
மனிதன்
ஓரறிவு
மிகுந்த
மிருகம் !....மிருகம்
ஓரறிவு
குறைந்த மனிதன்
_____________________________________
சூரியனே
நான்
காந்தி
என்பதால் சுட்டாயோ
சூரிய
காந்தி
!
_______________________________
மாறுபாடு
உப்பு
நீரில்
உயிர்
வாழும்
கடல்
மீன்கள்
உப்பு
நீரை
உற்பத்தி செய்யும்
விழி
மீன்கள்
____________________________________
No comments:
Post a Comment