Thursday, May 9, 2013

Haiku poems of Dr Balasandilyan



பாலசாண்டில்யனின் ஹைக்கூ கவிதைகள் 

விலைவாசி 
குளங்கள் வற்றியதால்
கொக்கெல்லாம்
மீனைப் போல் சந்தையில்
______________________________
முதிர்கன்னி
ஜன்னலுக்கு இரு கண்
தானம் தந்தது யார்
அக்கா தான்
______________________
விவசாயக்கூலி
போரடித்தாள் முறமசைத்தாள்
தவிட்டு மடியில்
பசிச்சுமை அந்தோ
___________________________
மாணவன்
பரீட்சை சோகமும்
காலைச் சிற்றுண்டியும்
முட்டையோடு தான்
_______________________________
அவள்
கறுப்பின் மேல் வெள்ளை
கொள்ளை அழகு
கூந்தல் செடியில் ரோஜா
_____________________________________
சந்தேகம்
காசு கொடுத்தவன்
தலையிலேயே கை
யானை
___________________________
வாடிக்கை
கன்னம் வைத்தான்
களவு போனது
காதல் இதயம்
_____________________________
வியப்பு
போடும் போது பச்சை
போட்ட பிறகு சிவப்பு
வெற்றிலை
______________________________
மாற்றம்
அக்காவுக்கு ஜீன்ஸ்
அவள் சீலை உனக்கா
ஜன்னல்
____________________________
வினோதம்
கண்டு நடுங்கினாள் மனைவி
பொறாமையோடு கணவன்
கரப்பான்பூச்சி
_____________________________
காரணம்
மிரண்டு போனது சிறுமி
மதில் மேல் மீசைக்காரன்
பூசணிக்காய்
_________________________
ஞாபகம்
அழகான டப்பா
திறந்ததும் சிரித்தது
பாட்டியின் பல்செட்
_____________________________________
அநியாயம்
அஸ்திவாரம் ஆரவாரமாய்
வளர்ந்தது வேகமாய் புதுவீடல்ல
கடனுக்கு வட்டி
________________________________
பாவம்
அறுபதைத் தொட்ட அப்பா
அழகாய் ஈசி சேரில் ....அம்பது தாண்டிய அம்மா
அடுப்படியில் இன்னும்
____________________________________
விதி
அழகு மனைவி சமூகசேவகி
அடுப்புக்கரி
அம்மா முகத்துக்கு மட்டும்
___________________________________
கவலை 
கண்களுக்கு சொந்தம்
கண்ணீர் மட்டுமா
கைக்குட்டையும் தான் 
____________________________________
ஏழை
வானமே அழு
என் குடையை தைத்த பின்
அழு வானமே
_______________________________
வியப்பு
மழை நின்ற பிறகும்
மழை
மரத்தடியில் ...!
________________________________
ஓலம்
தெருவில் வெள்ளம்
அணைந்தது அடுப்பு
பசி தீ தானே
_________________________________
அக்கப்போர்
நாய்களின் சண்டை
குப்பைத்தொட்டி அருகே
ஜெயித்தான் மனிதன்
__________________________________
அறிவு
மனிதன் ஓரறிவு மிகுந்த
மிருகம் !....மிருகம்
ஓரறிவு குறைந்த மனிதன் 
_____________________________________


சூரியனே
நான் காந்தி
என்பதால் சுட்டாயோ
சூரிய காந்தி !
_______________________________
மாறுபாடு
உப்பு நீரில் உயிர் வாழும்
கடல் மீன்கள்
உப்பு நீரை உற்பத்தி செய்யும்
விழி மீன்கள் 
____________________________________

No comments:

Post a Comment