Saturday, May 16, 2015

Balasandilyan's recent poems

Balasandilyan’s recent poems
ஆவின் பால்
ஊட்டச்சத்து
நேபால்
வாட்டச்சத்து
சரித்திரம் படைப்பது சரி
சரித்து சாய்ப்பது எப்படி
இமாலய சாதனை.??
கண்டு ரசித்த இடங்கள் 
இப்போது காணாமல் போனதுவாம் 
கண்டும் காணாது போல் 
இருப்பது இறைவன் லீலைகளாம் 
இமாலயத்தின் கீழ் குளிர் 
எப்போதும் உண்டு 
ஏன் இப்போது மட்டும் 
பூமிக்கு இந்த நடுக்கம் ??
இடிந்து போனது கட்டிடங்கள் மட்டுமா?
அப்பாவி மக்களின் நம்பிக்கையும் தானே ??!!

இரவிலும் சரி 
பகலிலும் சரி 
இருக்க வேண்டியது ஒழுக்கம் 
இருக்கக் கூடாதது புழுக்கம்
தேர்தலுக்கு பிறகு பயம் தருவது 
கவுன்டிங் 
தேர்வுக்கு பிறகு பயம் தருவது 
கவுன்செலிங்
அன்பாய் இருப்பது 
அழகாய் இருப்பது 
அகமகிழ்வில் இருப்பது 
ஆண்டவன் இருப்பதைக் காட்டும்
எல்லா நதிகளும் 
கலப்பது கடலில் சென்று 
எந்த கல்வியும் கொண்டு 
சேர்ப்பது ஐடியில் இன்று 
எது எடுத்தாலும் 
நூறு ரூபாய் சில கடைகளில் 
எவர் சேர்ந்தாலும் 
இருபது ஆயிரம் பல இடங்களில்
உண்மையின் அழகே 
அதில் பொய் இல்லை என்பது தான் 
உண்மையும் அழகும் 
என்றும் அசிங்கம் இல்லை.
அநேகமாக வந்த 
அநேக தகவல்கள் 
சிநேகமாக வரவில்லை 
சந்தேகமாக வந்தவை தான் 
சிநேகம் சினம் அறியாது 
சந்தேகம் பாசம் அறியாது
கருமேகம் காத்துக் கிடந்தன 
எங்கே அவை காணாது போயின ?
ஏமாற்றத்தால் 
கண்ணில் வந்தது மழை...
மண்ணில் எப்போது
அவளுக்கென்ன.?
பார்த்தது
பரிதவித்தது
பசி தூக்கம் மறந்தது
பாடாய்ப் படுவது
பாவம் நான் தானே..!!
அழகாய் என் முன் வந்து போன
அவளுக்கென்ன..!!
-
பாலசாண்டில்யன்
நீ 
எனது ஒளி 
நான் 
உனது நிழல் 
நீ 
எனது விழி 
நான் 
உனது காட்சி 
நீ 
எனது உலகு 
நான் 
உனது யாவும் 
நீ 
எனது கனவு 
நான் 
உனது நினைவு 
நீ 
எனது வாழ்வு 
நான் 
உனது வரமே !!
-
பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment