Thursday, October 23, 2014

My recent poems in Tamil

அகக்கணிப்பு மாறினால்
புறக்கணிப்பு மாறும்
மனநிலை வானிலை
போலத்தான்.... ஆனால்
வானிலை கட்டிற்குளில்லை
மனநிலை மாறும்...!

-------------------------------------------------------
ஐ..வெயில் அடிக்கிறது
வா நாம் வெடி வெடிக்கலாம்
தங்கையை அழைப்பேன் அன்று
ஐ...வெயில் அடிக்கிறது
வேட்டி துணி தோய்க்கலாம்
மகளை அழைக்கிறேன் இன்று
அதே மனுஷி அதே சூரியன்
ஆண்டுகள் மாறும் போது
அடையாளம் மாறுகிறது
இப்படி...எதிலும் மாறிய நிலை
மனைவி பகர்ந்தாள்
மனதைப் பகிர்ந்தாள்
மாறியது நெஞ்சம்
மாற்றியது யாரோ?!

------------------------------------------------------
காண்பது கேட்பது
தொடுவது சுவைப்பது
நுகர்வது மாறினால்
எண்ணம் மாறும்
எண்ணம் மாறினால்
நம்பிக்கை மாறும்
நடத்தை மாறும்
மூன்றும் மாறினால்
தோல்வி என்பது
வெற்றியாக மாறும்
துன்பம் என்பது
இன்பமாக மாறும்

---------------------------------------------
வெள்ளப்பெருக்கு
விடுப்பு
விடுவிப்பு
பயணிகள் தவிப்பு
தள்ளுபடி அறிவிப்பு
மீறிடும்
பரபரப்பு...
தீபாவளி வாழ்த்துகள்..!

-------------------------------------------
மக்கள் வெள்ளம்
மழை வெள்ளம்
போட்டி....
வென்றனர் மக்கள்...

-------------------------------------------
கடவுள் நம் பக்கம்
இல்லை என்பதே
பலரின் கவலை...!
நாம் கடவுள் பக்கம் தானே
கேட்போம் இக்கேள்வி....?!?
மனதில் புதிய வேள்வி
புரண்டோடும் கவலை...
தாங்கொணாது தனது தோல்வி!!

-------------------------------------------------
இச்சை
கொச்சை
பச்சை
சர்ச்சை
இல்லாது
இருக்கட்டும்
பேச்சு...
எழுத்து...!
இருப்பின்
இன்பமே...!!

No comments:

Post a Comment