இருப்பினும் வங்கிகள் நம் உயிர் வாங்கிகள் ஆகி விட்டனவே.
ஏன் இவர்கள் VRS எனும் விருப்ப ஓய்வு பெறக் கூடாது...
ஆனால் இவர்கள் இடத்தில் இளைஞர்கள் வருவார்கள். சிறந்த சேவை தருவார்கள் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். ஏன் எனில் இளைஞர்கள் வேலை பெற சம்பளம் பெற விரும்புகிறார்கள்....வேலை செய்ய அல்ல...!
பெரும்பாலான இடங்களில் இந்த சூழலை பார்க்கலாம்.
சிக்கல் என்றால் மருத்துவரிடம் செல்லுங்கள்...விடுமுறையில் செல்லுங்கள்...
திரும்பி வந்து உற்சாகமாக செயல்படுங்கள்.
ஆனால் கறுத்த முகம், கடு கடு முகம், சிடு சிடு முகம் மாற வேண்டும்...
மேல் அதிகாரிகளால் இதனை சரி செய்ய முடிய வில்லை.
இவர்கள் தானே உணர்ந்து சரி செய்து கொண்டால் தான் தீர்வு பிறக்கும்.
அது வரை பூனைக்கு மணி யார் கட்டுவது...என்ற எண்ணத்தை கை விடுங்கள்.
என்னைப் போல புலம்புவதை நிறுத்துங்கள்.
இன்சூரன்ஸ், வங்கி, ரயில்வே எல்லாப் பணிகளையும் நெட் மூலம் செய்வோம்.
No comments:
Post a Comment