Friday, August 23, 2013

Verses from my pen ...Just fresh!

சவரம் செய்
தீநீர் அருந்தாதே
புகை விடாதே
என்றுரைத்தால்
'மனிதவதை' குற்றம்
என்கிறான் - இவன் எந்த
மனிதவகை ?!
_______________________________
 
உறவு கொள்ளும்
உந்தன் வரவை
நினைத்திடும் முன்பே
கண்கள் நிழலாய் கொஞ்சம்
கனவில் பார்ப்பதென்ன ?

உதடு சொல்லும்
உந்தன் பெயரை
உச்சரிக்கும் முன்பே
இதயம் அதனை கொஞ்சம்
முனகிப் பார்ப்பதென்ன ?
_____________________________________
 
மனதில் ஒட்டும்
உதடுகளில் அல்ல
உந்தன் பெயர்

கண்ணில் தெரியும்
கனவுகளில் அல்ல
உந்தன் முகம்

நினைவில் நிற்கும்
ஞாபகத்தில் அல்ல
எந்தன் மனம்
_______________________________________
 
அன்பில் செய்த
ஆபரணம் தானே
புன் 'நகை'

அன்பு தரும்
அனுபவம் தானே
வாழ்க்கை

அன்பில் விளைந்த
அறுவடை தானே
அகிலமும்
_______________________________________
 என் கண்கள்
எட்டப்பன் பரம்பரை !
எதை நான் நினைத்தாலும்
உனை நான் நினைத்தாலும்
காட்டிக் கொடுத்து விடுகிறது ! - கலகம்
மூட்டிக் கொடுத்து விடுகிறது !!

No comments:

Post a Comment