Saturday, August 31, 2013

நினைத்துப் பார்ப்போம்

நினைத்துப் பார்ப்போம்

மரணத்தை விட கொடுமை - மூடத்தனம்
இருக்கலாமா ?
மூச்சையும் விட முக்கியம் - ஒழுக்கம்
இழக்கலாமா ?
கை கால்களை விட அற்புதம் - மனைவி மக்கள்
வெறுக்கலாமா ?
காற்று நீரை விட அவசியம் - அன்பு நேசம்
மறக்கலாமா ?
நெருப்பை விட வீரியம் - கோபம்
கொள்ளலாமா ?
குப்பையை விட அற்பம் - கவலை
சுமக்கலாமா ?

- டாக்டர் பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment