Saturday, October 20, 2012

Balavin kavithaigal



காதல்
வார்த்தை இல்லா கவிதை
எப்படி படிப்பது
அந்த கவிதையை
அவள் மனதை...!
எப்படி பிடிப்பது
அவள் மனதில் ஒரு இடம் !
நாள்காட்டியில் தாள் கிழிகிறது..
தினம் தினம் மனம் அழுகிறது..!
- டாக்டர் பாலசாண்டில்யன்

நீர் இல்லை என்று
சத்தம் போட்டோம் ..கோர்ட்டில்
யுத்தம் செய்தோம்
இப்போது அதிக மழை என்று
வெள்ள நிவராணம் கேட்போமா ?
காஞ்சா காயும் பேஞ்சா பேயும்
அது தான் இயற்கை !

காதலில் விழுந்தேன் என்பவர்கள்
நளினமானவர்கள்
காலில் விழுந்தேன் என்பவர்கள்
எளிமையானவர்கள்
காதில் விழுந்தேன் என்பவர்கள்
வலிமையானவர்கள்
காதலில் விழுந்தால்
வலி நிச்சயம்
காலில் விழுந்தால்
ஆசி நிச்சயம்
காதில் விழுந்தால்
வெற்றி நிச்சயம்
-
டாக்டர் . பாலசாண்டில்யன்


மழை இல்லை என்றால்
காய்கிறது என்ற புலம்பல்
மழை பெய்து விட்டால்
பெய்கிறது என்ற புலம்பல்
சிலர் பள்ளம் என்றும்
சிலர் வெள்ளம் என்றும்
புலம்புவதை நிறுத்தி
மழையை ஆராதிப்போம்
வானுக்கு நன்றி சொல்வோம்
மழை இன்றி வாடி நிற்பதை விட
மழை வந்ததே என்று பாடி நிற்போம்
நமக்கு பிடிக்கா விட்டாலும்
மண்ணுக்கு பிடிக்கும் மழை ...மறக்க வேண்டாம்
-
டாக்டர் . பாலசாண்டில்யன்

சிவாஜியில் பாஸ்
எந்திரனில் மிஷின்
கோச்சடையானில் சித்திரம்
அடுத்தது என்ன ?
கில்லி குருவி துப்பாக்கி
எல்லாமே சுட்டா பட்டா பறக்கும்
தெய்வதிருமகள் ஆடிய தாண்டவத்தில்
காணாமல் போனவன் கரிகாலன்
ஏழாம் அறிவில் சித்தம் கலங்கி
மாற்றான் தோற்றான்
விண்ணை தாண்டி வருவாயா என்று கேட்டு விட்டு
போடா போடி என்கிறான்
'
கோ'பமாய் முகமூடி போட்டவன் சொன்னான்
நீ தானே என் பொன்வசந்தம்
தசாவதாரம் காட்டி விட்டு
எடுத்து விட்டான் இப்போது விஸ்வரூபம் ..!


உரைக்காத மனிதன்
குறைக்காத நாய்
பொல்லாது என்பது சொல்லாது
தெரிய வேண்டும்...!

உள்ளே வெளியே !
உண்மை அதிக நேரம் இருட்டில் இருக்காது
பொய் அதிக நேரம் வெளிச்சத்தில் இருக்காது


No comments:

Post a Comment