திருப்பிக் கொடுத்த அதே காசு :
தந்தை இறந்தவுடன் மகன் தாயைக் கொண்டு போய் முதியோர் இல்லத்தில் சேர்த்தான். அவ்வப்போது போய் பார்த்து வந்தான்.
ஒரு நாள் அந்த இல்லத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
தாய் மிகவும் உடல்நிலை சரியாக இல்லாமல் இருந்தார். மகன் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று வினவினான்.
அம்மா சொன்னார்,"மகனே இந்த இல்லத்தில் உடனடியாக மின்விசிறி வாங்கிப் பொறுத்து. இங்கு எல்லோரும் கஷ்டப்படுகிறார்கள்.
"இவ்வளவு நாளாக இருக்கும் நீங்கள் உங்கள் உடல்நிலை மோசமாகும் இந்த நிலையில் ஏன் சொல்கிறீர்கள்? முன்பே சொல்லி இருக்கலாமே"
அம்மா சொன்னார், " இல்லை அப்பா நான் எப்படியோ சமாளித்து விட்டேன். நாளை உனது குழந்தைகள் உன்னை இங்கே கொண்டு வந்து விட்டால் நீ சிரமப்படுவாய் அதனால் தான் சொல்கிறேன்"
ஆச்சரியத்துடன் பார்த்தான் மகன்.
No comments:
Post a Comment