கேயி கேயி மாஜே வாசே - மெட்டு தாளம் : சாபு
கேவிக் கேவி நான் அழுதேன்
கேட்கலையோ கண்ணா உனக்கு
பாவி என்னைப் பாராமல்
பாராமுகம் கொண்டதேனோ - கேவி
தாவி என்னைச் சேர்த்தணைத்து
தழுவி நிதம் கொள்வாயோ
ஆவி பொருள் உடலனைத்தும்
அறியாமல் செய்வாயோ ? - கேவி
ஆவல் மிகக் கொண்டதாலே
அளவிலாத துயருற்றேன்
காவல் செய்யவே எனக்கு
கண்ணா நீ வருவாயோ - கேவி
- டாக்டர் பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment