Sunday, August 17, 2014

Krishna Gaanam -2

கேயி கேயி மாஜே வாசே - மெட்டு          தாளம் : சாபு 

கேவிக் கேவி நான் அழுதேன் 
கேட்கலையோ கண்ணா உனக்கு 
பாவி என்னைப் பாராமல் 
பாராமுகம் கொண்டதேனோ  - கேவி 

தாவி என்னைச் சேர்த்தணைத்து 
தழுவி நிதம் கொள்வாயோ 
ஆவி பொருள் உடலனைத்தும் 
அறியாமல் செய்வாயோ ? - கேவி 

ஆவல் மிகக் கொண்டதாலே 
அளவிலாத துயருற்றேன் 
காவல் செய்யவே எனக்கு 
கண்ணா நீ வருவாயோ - கேவி 

- டாக்டர் பாலசாண்டில்யன் 

No comments:

Post a Comment