ராகம் : தேஷ் தாளம் : ஆதி
குழலூதி வருகின்ற கண்ணன் - அன்பர்
குரல் கேட்டு வருகின்ற மன்னன்
குரல் கேட்டு வருகின்ற மன்னன்
அழகான சிலை கூட அவன் பாட மயங்கும்
அமுதூறும் இதழ் நாடி அவன் நாமம் படிக்கும்
தழுவாத இளந்தென்றல் அவன் நாதம் கொணரும்
தரும் போதை அவன் கீதம் தேனாக இனிக்கும் - (குழலூதி)
அமுதூறும் இதழ் நாடி அவன் நாமம் படிக்கும்
தழுவாத இளந்தென்றல் அவன் நாதம் கொணரும்
தரும் போதை அவன் கீதம் தேனாக இனிக்கும் - (குழலூதி)
மழை மேகம் போல் எந்தன் மனந்தன்னில் புகுந்து
மறைந்தோடி ஒயிலாக இருள் தன்னில் பறந்து
இழைந்தோடும் அவன் அன்பில் எனை நானே மறந்து
இமை மூடி இசை பாடி எடுக்கின்ற விருந்து - காண (குழலூதி)
மறைந்தோடி ஒயிலாக இருள் தன்னில் பறந்து
இழைந்தோடும் அவன் அன்பில் எனை நானே மறந்து
இமை மூடி இசை பாடி எடுக்கின்ற விருந்து - காண (குழலூதி)
- டாக்டர் பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment