Sunday, August 17, 2014

krishna ganam

ராகம் : தேஷ் தாளம் : ஆதி
குழலூதி வருகின்ற கண்ணன் - அன்பர்
குரல் கேட்டு வருகின்ற மன்னன்
அழகான சிலை கூட அவன் பாட மயங்கும்
அமுதூறும் இதழ் நாடி அவன் நாமம் படிக்கும்
தழுவாத இளந்தென்றல் அவன் நாதம் கொணரும்
தரும் போதை அவன் கீதம் தேனாக இனிக்கும் - (குழலூதி)
மழை மேகம் போல் எந்தன் மனந்தன்னில் புகுந்து
மறைந்தோடி ஒயிலாக இருள் தன்னில் பறந்து
இழைந்தோடும் அவன் அன்பில் எனை நானே மறந்து
இமை மூடி இசை பாடி எடுக்கின்ற விருந்து - காண (குழலூதி)
- டாக்டர் பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment