Monday, August 11, 2014

My recent poems

வலையோடு போனவன்
கெண்டையோடு வந்தான்
கவலையோடு போனவன்
சண்டையோடு வந்தான்
- பாலசாண்டில்யன்

கூரையை தைப்பது கடினம்
சுகமாய் இதமாய்
மனதை வைப்பது மௌனம்
- பாலசாண்டில்யன்

பிரச்சனைகள்:
பேசிப் பேசி
நாம் தான்
அவற்றிற்கு
வலு சேர்க்கின்றோம்
நமக்கு
வலி சேர்க்கின்றோம்
- டாக்டர் பாலசாண்டில்யன்

பாலா'ஸ் பஞ்ச்:
சேர்ந்ததே 
பிரியத்தான்...!
பிரியத்தால்
அல்ல...!!

புரிந்ததால்
சில உணர்வுகள்
புரிகிறது
தம் லீலைகளை
- டாக்டர் பாலசாண்டில்யன்

ஓங்கிப் பெய்ததால்
குடைக்கு கோபம்
முகத்தை திருப்பிக் கொண்டது
- டாக்டர் பாலசாண்டில்யன்

மழை நின்ற பிறகும்
மழை
மரத்தடியில்
- டாக்டர் பாலசாண்டில்யன்

பெய்யாத போது மேகங்கள் வான் முகில்கள்.
மழை தருகின்ற போது அவை கருணை முகில்கள்


வானொலி என்றால் நேயர் விருப்பம்
கார்ப்பரேஷன் என்றால் மேயர் விருப்பம்
வரலஷ்மி நோன்பு அன்று -
நேமநிஷ்டை சாமியார் விருப்பம்
நைவேத்தியம் மாமியார் விருப்பம்

No comments:

Post a Comment