Thursday, June 12, 2014

My recent poems

டாக்டர் பாலசாண்டில்யன் கவிதைகள் :

கையை காலி செய்து விட்டார்
குழம்பாதே புலம்பாதே - கை
காலியாய் இருந்தால் தானே
அவரால் வேறு ஒன்று தர முடியும் !
--------------------------------------------------------------
அமைதி என ஒன்று
இருக்குமாயின் அது
நீ பெறுவதல்ல
உனக்குள் உறைவது !
--------------------------------------------------------------
பணமில்லை வளங்களில்லை
நம்பிக்கையில்லை
மகிழ்வானவன் எனக்கு(ள்)
உயிருண்டு ...! உலகமுண்டு...!
--------------------------------------------------------------
சோகங்கள் நிறைந்த
பேய்கள் நடுவே
மகிழ்வானவன் ஒரு
மன நோயாளியோ ?!?
---------------------------------------------------------------------
சேருமிடம் எப்போதும்
ஓர் ஊர் அல்ல
உலகை உவகையோடு
பார்க்கும் வழி ....!

No comments:

Post a Comment