Wednesday, March 30, 2016

Tamil Quotes by Balasandilyan

வருத்தங்களை மணலில் எழுது ...ஏன் நீரில் கூட எழுது ...!
பெற்ற அருளாசிகளை பாறையில் செதுக்கு ...!!
மகிழ்ச்சி தானாய் மனதில் தங்கும் !

இடது புறம் வலது புறம் இருபுறமும் இறக்கை இருந்தாலும் இரண்டுமே வேறு அல்ல - அவை என்னுடையது என்பதை 
எப்படி மறப்பேன் மறுப்பேன்?!

சிலர் வீடு வாசலை சிலர் மனசாட்சியை அடமானம் வைத்து வியாபாரம் செய்கிறார்கள்

குழந்தை அழுதால் - சின்னக் குழந்தை என்றால் வுட்வேர்ட்ஸ் ... பெரிய குழந்தை என்றால் குட்வேர்ட்ஸ் ...!!

(ம)ரணத்தை விடக் கொடுமையானது மன்னிக்கும் தன்மை. ஆனாலும் மன்னித்தால் தான் மனஅமைதி. ரணமல்ல.. நம் குணமே பெரிது.

அடக்கம் தான் செய்யப் பட வேண்டுமா?
அடக்கமாக நம்மால் இருக்க முடியாதா ?

அன்புக்கு ஏங்குகிறோம் 
அன்பை விலை கொடுத்தும் வாங்குகிறோம் 
அன்பாய் ஏன் நம்மால் இருக்க முடியவில்லை?

உண்மையைச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் மனசு பாரமாகத்தான் இருக்கும். அது தான் பாழும் மன இயல்பு.

முன்பு பாத்திரம் பண்டம் பயன்படுத்தினார்கள். நேற்று லேப்டாப், மொபைல் பயன்படுத்தினார்கள். இன்று மனிதர்களை பகடைக் காயாய் பயன்படுத்துகிறார்கள்.

துரோகிகள் வெல்வது போல் இருக்கலாம். துரோகம் ஒரு ரோகம் என்றும் வெல்வதில்லை. துரோகிகள் முகம் புன்னகை தருவதில்லை.

சொல்லித் தெரிவதில்லை 
(ஏ)மாற்றிப் பேசும் கலை

மரணமெனும் சதாரணத்திற்கு நிவாரணம் வழங்கி ஆற்றுப்படுத்த முடியாது. உயிரின் உண்மை மதிப்பு உணர்வதற்கு அன்பே வழி

முதலில் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு பின்னர் நீங்கள் செயலில் இறங்க வேண்டும் என்று பொதுவாகக் கூறப்படுவது தவறு. பயத்துடன் இருக்கும் போது நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இருந்து தான் துணிச்சல் பிறக்கிறது.



No comments:

Post a Comment