சிவ தாண்டவ தோத்திரம் (மொழி பெயர்ப்பு - டாக்டர் பாலசாண்டில்யன்)
மங்கலம் பொலிந்திடும் ஆனந்த நர்த்தனனே
திங்களை அணிந்த தில்லை யம்பலனே
கங்கையைச் சடையில் தாங்கினாய் அதனால்
தங்கிய நஞ்சும் பரிசுத்த மானதுவோ
ஸ்ருங்காரமாய் அரவு மாலை யணிந்தவனே
எங்குமே இன்பம் அருளிடச் செய்குவாய் !
திங்களை அணிந்த தில்லை யம்பலனே
கங்கையைச் சடையில் தாங்கினாய் அதனால்
தங்கிய நஞ்சும் பரிசுத்த மானதுவோ
ஸ்ருங்காரமாய் அரவு மாலை யணிந்தவனே
எங்குமே இன்பம் அருளிடச் செய்குவாய் !
வற்றாத அமரநதி சுழன்று சுழன்றே
சுற்றிச் சொரிகின்ற சடைமுடி இறைவனே
தொற்றி நிற்குமொரு பிறைநில வதன்கீழ்
நெற்றிப் பட்டியில் ஜொலிக்கும் அக்னியனே
முற்றுமு ணர்ந்த ஞானியே பரமனே
குற்றமிலா தொருநிலை அருளிடச் செய்குவாய் !
சுற்றிச் சொரிகின்ற சடைமுடி இறைவனே
தொற்றி நிற்குமொரு பிறைநில வதன்கீழ்
நெற்றிப் பட்டியில் ஜொலிக்கும் அக்னியனே
முற்றுமு ணர்ந்த ஞானியே பரமனே
குற்றமிலா தொருநிலை அருளிடச் செய்குவாய் !
வண்ண நிலவின் வடிவழகால் ஒளியால் இமாலயன்
புண்ணிய புத்ரியின் அழகும் கூடியநிலை
கண்ணால் எந்நாளும் கண்டு தரிசித்தால்
எண்ணம் ஈடேறும் மமதை தானொ ழிந்து
தன்னை யறிந்தாளும் தன்மை தானுயரும்
வன்மை வழங்கி அருளிடச் செய்குவாய் !
புண்ணிய புத்ரியின் அழகும் கூடியநிலை
கண்ணால் எந்நாளும் கண்டு தரிசித்தால்
எண்ணம் ஈடேறும் மமதை தானொ ழிந்து
தன்னை யறிந்தாளும் தன்மை தானுயரும்
வன்மை வழங்கி அருளிடச் செய்குவாய் !
ஓதும் மறைநான்கின் மேன்மை உரைக்கவல்
மேதினியைக் காக்கும் தான்நினது சடையைக்
கோதும் நாகமதின் சோதிமிகு ஒளியால்
மோதும் திசையெட்டின் பெண்டிர்முகம் சிவக்கும்
பூபதியுன் மேலாடை மதயானை சருமம் ;
வேதமுதல்வனே தீதின்றி அருளிடச் செய்குவாய் !
மேதினியைக் காக்கும் தான்நினது சடையைக்
கோதும் நாகமதின் சோதிமிகு ஒளியால்
மோதும் திசையெட்டின் பெண்டிர்முகம் சிவக்கும்
பூபதியுன் மேலாடை மதயானை சருமம் ;
வேதமுதல்வனே தீதின்றி அருளிடச் செய்குவாய் !
நொடிப் பொழுது நின்விழிமலர் தரிசனம் போதுமென
அடித் தொழுது வணங்கும் இந்திராதி தேவர்பாதமலர்
வெடித்துச் சிதிறிய மகரந்தம் நின் பொற்பாதம்
பிடித்துத் தொழுதிட செய்பாவம் தானகலும்
மடியும் பல்லுயிர் சூழ்ந்திலங்கும் பாரினில்
தோடுடைய செவியனே அருளிடச் செய்குவாய் !
அடித் தொழுது வணங்கும் இந்திராதி தேவர்பாதமலர்
வெடித்துச் சிதிறிய மகரந்தம் நின் பொற்பாதம்
பிடித்துத் தொழுதிட செய்பாவம் தானகலும்
மடியும் பல்லுயிர் சூழ்ந்திலங்கும் பாரினில்
தோடுடைய செவியனே அருளிடச் செய்குவாய் !
நாட்டமுடன் நாளும் வணங்கிடும் தேவர்
கூட்டத்தின் அதிபதியே தகிக்குமுன் நெற்றிப்
பொட்டின் அக்னியின் மதனை எரித்தவனே
வாட்டம் மிகப்போக்கி நெஞ்சின் சஞ்சலமெனும்
கேட்டைத் தவிர்த் தன்பர்க் கேற்றம் புரிந்துநல்
வீட்டைப் பெறும்வண்ணம் அருளிடச் செய்குவாய் !
கூட்டத்தின் அதிபதியே தகிக்குமுன் நெற்றிப்
பொட்டின் அக்னியின் மதனை எரித்தவனே
வாட்டம் மிகப்போக்கி நெஞ்சின் சஞ்சலமெனும்
கேட்டைத் தவிர்த் தன்பர்க் கேற்றம் புரிந்துநல்
வீட்டைப் பெறும்வண்ணம் அருளிடச் செய்குவாய் !
வீணே உழன்றுழன்று வேதனைகொள் மனதைப்
பேணி நன்னெறியில் ஏற்றமொடு நல்கிட
ஆணும் பெண்ணும் இரண்டுமே நானென்று
ஆணிவேர் தத்துவத்தை அழகுற எடுத்துரைத்து
நானிலத்தை காக்கும் ஆதிசிவனே அய்யனே
வானுறை உமையவனே அருளிடச் செய்குவாய் !
பேணி நன்னெறியில் ஏற்றமொடு நல்கிட
ஆணும் பெண்ணும் இரண்டுமே நானென்று
ஆணிவேர் தத்துவத்தை அழகுற எடுத்துரைத்து
நானிலத்தை காக்கும் ஆதிசிவனே அய்யனே
வானுறை உமையவனே அருளிடச் செய்குவாய் !
எந்தையே நின்கழுத்துக் கருமைகார் மேகங்கள்
சிந்திடும் அமாவாசை யிருட்டோ என்றென்
சிந்தை கிறுக்கும் செயல்புரிய மறக்கும்
சந்திரனின் ஒளிதாங்கிய தலையோனே சிவனே
முந்தைய தீவினைகள் பொறுத்தே எவர்க்கும்
வந் தபயம் வழங்கி அருளிடச் செய்குவாய் !
சிந்திடும் அமாவாசை யிருட்டோ என்றென்
சிந்தை கிறுக்கும் செயல்புரிய மறக்கும்
சந்திரனின் ஒளிதாங்கிய தலையோனே சிவனே
முந்தைய தீவினைகள் பொறுத்தே எவர்க்கும்
வந் தபயம் வழங்கி அருளிடச் செய்குவாய் !
முப்புர மெரித்தவனே நீலகண்டனே தக்ஷனின்
தப்பெனும் வேள்வியைக் கலைத்தவனே அரனே
அப்பனே அந்தகாசுரனை வதைத்தவனே என்றும்
ஒப்புயர்விலா உத்தமனே நமனை நசித்தவனே
உப்பிலியே கொடிய கஜாசுரர்க்கு சிம்ம
சொப்பனமானவனே தூயவனே அருளிடச் செய்குவாய் !
தப்பெனும் வேள்வியைக் கலைத்தவனே அரனே
அப்பனே அந்தகாசுரனை வதைத்தவனே என்றும்
ஒப்புயர்விலா உத்தமனே நமனை நசித்தவனே
உப்பிலியே கொடிய கஜாசுரர்க்கு சிம்ம
சொப்பனமானவனே தூயவனே அருளிடச் செய்குவாய் !
துறவுமா மன்னனே துக்கம் கடந்தவனே
அரவு பூண்டவனே அம்புலி அணிந்தவனே
உறவு அபிமானமில்லா உன்னத மானவனே
பரமனே திகம்பரனே பரதத்தின் நாயகனே
மறவாது புகழ்பாட மயங்கிடும் மறையவனே
பிறவாத வரந்தனை அருளிடச் செய்குவாய் !
அரவு பூண்டவனே அம்புலி அணிந்தவனே
உறவு அபிமானமில்லா உன்னத மானவனே
பரமனே திகம்பரனே பரதத்தின் நாயகனே
மறவாது புகழ்பாட மயங்கிடும் மறையவனே
பிறவாத வரந்தனை அருளிடச் செய்குவாய் !
வேலவன் தந்தையே குளிர்மலை நாதனே
சூலனைகாலனை காலால் உதைத்தவனே மறையே
சூலம் தரித்தவனே சுந்தரனே இறைவனே
ஞாலம் ஆளுகின்ற நர்த்தன நாயகனே
நாளும் ஆடுகின்ற உடுக்கை உடையவனே
நீலகண்டப் பெருமாளே அருளிடச் செய்குவாய் !
சூலனைகாலனை காலால் உதைத்தவனே மறையே
சூலம் தரித்தவனே சுந்தரனே இறைவனே
ஞாலம் ஆளுகின்ற நர்த்தன நாயகனே
நாளும் ஆடுகின்ற உடுக்கை உடையவனே
நீலகண்டப் பெருமாளே அருளிடச் செய்குவாய் !
வார்த்தைக் கெட்டாத வொரு மாதவமே அருள்மிகு
நேர்த்தியினும் மேலான வாசகமே பிரார்த்தனைகள்
பூர்த்திசெய் புண்ணியரூபனே பாறையை பஞ்சை
கீர்த்திமிகு ரத்தினத்தை கருங்கல்லை சிநேகிதனை
பார்த்திகழும் பாதகனை ஆண்டியை அரசனை
நேர்சமமாய் பாவிக்க அருளிடச் செய்குவாய் !
நேர்த்தியினும் மேலான வாசகமே பிரார்த்தனைகள்
பூர்த்திசெய் புண்ணியரூபனே பாறையை பஞ்சை
கீர்த்திமிகு ரத்தினத்தை கருங்கல்லை சிநேகிதனை
பார்த்திகழும் பாதகனை ஆண்டியை அரசனை
நேர்சமமாய் பாவிக்க அருளிடச் செய்குவாய் !
வாசமிகு மலர்மார்பா அங்கமெலாம் வெண்ணீற்றைப்
பூசுகின்ற ஈசனெனும் அய்யனே கங்காதரனே
ஆசுகவி அடியவர்க்கு முதல்வோனே நற்கருணை
வீசுகின்ற சுகக்காற்றே மறைபொருள் ஆனவனே
பேசுகின்ற வாய்நிதமும் நமச்சிவாய மெனஜெபித்து
தாசனென மாறிவிட அருளிடச் செய்குவாய் !
பூசுகின்ற ஈசனெனும் அய்யனே கங்காதரனே
ஆசுகவி அடியவர்க்கு முதல்வோனே நற்கருணை
வீசுகின்ற சுகக்காற்றே மறைபொருள் ஆனவனே
பேசுகின்ற வாய்நிதமும் நமச்சிவாய மெனஜெபித்து
தாசனென மாறிவிட அருளிடச் செய்குவாய் !
அரிதெலாம் உனக்கெளிது அனைத்துமே உன்சித்தம்
பாராளும் பரமனே இப்புனித தோத்திரத்தை
யாரெலாம் துதிப்பரோ அவர்குலம் தழைக்கும்
ஏராளமாய் நின்னருள் அவர்க்கு கிடைக்கும்
வேரோடு மருந்தென துக்கம் முறிக்குமென
ஈரேழு உலகிற்கும் அருளிடச் செய்குவாய் ..!
பாராளும் பரமனே இப்புனித தோத்திரத்தை
யாரெலாம் துதிப்பரோ அவர்குலம் தழைக்கும்
ஏராளமாய் நின்னருள் அவர்க்கு கிடைக்கும்
வேரோடு மருந்தென துக்கம் முறிக்குமென
ஈரேழு உலகிற்கும் அருளிடச் செய்குவாய் ..!
No comments:
Post a Comment