வா வந்து தழுவு
மீண்டும் இவ்விரவு
வரலாம் வராமல் போகலாம்
இந்த ஜென்மத்தில் நம் சந்திப்பு
இல்லாது போகலாம்
மீண்டும் நாம் எதுவும்
சொல்லாது சாகலாம்
வா வந்து தழுவு
மீண்டும் இரவு
வா வந்து தழுவு
பின்பு நீ நழுவு
இக்கணம் ஏனோ
நமது வசம்
நம் பேரதிர்ஷ்டம்
வா என்னைப் பார்த்துச் செல்
மனதாரக் கண்டு கொள்
மிக அருகில் ...வான் நடுவில்
வா வந்து தழுவு
மீண்டும் இரவு வா
வந்து தழுவு
பின்பு நீ நழுவு
நிகழுமா இந்நிகழ்வு
மீண்டும் வாழ்வில்
வருமோ வராதோ
இன்பம் தராதோ
கையை மாலையாக்கி
கழுத்தில் நீ போடு
ஆனந்தக் கண்ணீரோடு
வா வந்து தழுவு
மீண்டும் இரவு
வா வந்து தழுவு
பின்பு நீ நழுவு
கண்களால் எனைக்கடத்து
அன்பு மடியில் நிறைத்து
இப்பாச மழை
நமை நனைக்க
நினைந்திருப்போம் நம் உறவை
நனைத்து நிற்போம் இந்த இரவை
வா வந்து தழுவு
மீண்டும் இரவு வா
வந்து தழுவு
பின்பு நீ நழுவு
மீண்டும் இவ்விரவு
வராமல் போகலாம்
இந்த ஜென்மத்தில்
நம் சந்திப்பு
இல்லாது போகலாம்
- பாலசாண்டில்யன்
(Heard Lag ja gale....several times...could not resist trying this in Tamil....
Lata Mangeshkar ji's one of the best songs.
No comments:
Post a Comment