Wednesday, November 19, 2014

Are you retired....be aware...beware.

கதையல்ல நிஜம் - 3
- டாக்டர் பாலசாண்டில்யன் 

ரவிச்சந்திரன் தனது 52 வது வயதில் பணி விருப்ப ஓய்வு பெற்றார். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என்று வரவழைத்துக் கொண்டதால் அடிக்கடி தலை சுற்றல், கை கால் நடுக்கம் என்று உடல் உபாதைகள். தனியார் நிறுவனம் என்பதால் ஓய்வு பெற்ற போது கிராஜுவிட்டி என்று நான்கு லட்சம் ரூபாய் தான் வந்தது.

தனது பெண் ரமாவின் திருமணத்திற்கு மூன்று லட்சம் செலவானது. மீதம் ஒரு லட்சத்தில் கடன் வாங்கிய ஐம்பதாயிரம் கரைந்து போனது. மீதி பணம் பிக்செட் டெபாசிட்டில் வங்கியில் போய் உட்கார்ந்தது.

ரவிச்சந்திரனுக்கு திடீரென்று காது இரண்டும் கேட்காமல் போனது. தினமும் மகன் கணேஷிடமும் மனைவி பானுவிடமும் அர்ச்சனை தான். ரவிச்சந்திரன் தான் உண்டு தன் செய்தித்தாள் மற்றும் டிவி உன்று என்று இருப்பது வழக்கமாகிப் போனது.

கணேஷிற்கு கல்யாணம் ஆனது. ரவிச்சந்திரன் ஹோமுக்கு அனுப்பப்பட்டார். மனைவி பானு மகனுக்கு அடிமை ஆனாள். ரவிச்சந்திரனுக்கு அப்படி இப்படி என்று வயது அறுபது ஆனது. கண்ணிலும் கோளாறு. அடிக்கடி பல் பிரச்சனை வேறு. கேட்பாரற்று இருந்த அவர் நிலைமை நாளுக்கு நாள் மோசமானது.

முதியோர் இல்லத்திலிருந்து ரவிச்சந்திரன் என்கிற ஓர் அநாதை இறந்து விட்டதாக 
குரோம்பேட்டை ராகவுனுக்கு ஒரு நாள் போன் வந்தது, ராகவன் அநாதைப் பிணங்களுக்கு ரட்சகன் என்பதால் மகனைப் போல் இருந்து காரியங்கள் முடித்து வைத்தார். 

மகன் மகள் மனைவி யாவரும் இருந்தும் அநாதையான இந்த கதி...அப்பப்பா...
வர வேண்டாம் யாருக்கும்....!

No comments:

Post a Comment