Wednesday, November 19, 2014

Music can heal...

எந்த ராகம் என்ன என்ன நோய்களைக் குணப்படுத்தும் ?
ஆகிர் பைரவி - அஜீரணத்தையும் ஹைபர் டென்ஷன் எனும் உயர் ரத்த அழுத்தத்தை, மற்றும் மூட்டு வலிகளையும் குணப்படுத்துகிறது.
பைரவி - முட்டி வலி மற்றும் முழங்கால் வலி 
சந்திரகௌன்ஸ் - பசியின்மை 
தர்பாரி கானடா - தலைவலி 
தீபக் - அஜீரணம், பசியின்மை, நெஞ்செரிச்சல், குடற்கற்கள் 
குஜரி தோடி - இருமல், சளி 
ஜோன்புரி - வாயுக் கோளாறு, பேதி, மலச்சிக்கல் 
ஜெய் ஜெய் வந்தி (த்வஜாவந்தி ) - பேதி, தலைவலி, மூட்டுவலி 
மால்கௌன்ஸ் - குடல் வாயு 
பூர்வி கல்யாணி - இரத்த சோகை, டென்ஷன், குடல் எரிச்சல் 
பூர்ய தனஸ்ரீ - இரத்த சோகை 
வசந்த பஹார் - குடற்கற்கள் 
யெமன் கல்யாணி - மூட்டு வலி 

தெய்வீக ஓசையாக ஒலியாக விளங்கும் 'ஓம்' என்னும் சப்தம் மனதுக்கு ரம்மியமானது. இசைக்கு அதுவே ஆதார ஸ்ருதி ஆகும். ஓம் என்று தொடர்ந்து சொல்வதால், ஜெபிப்பதால் நாடித் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராகிறது. மன அழுத்தம் மற்றும் நரம்புத் தளர்ச்சி சரியாகிறது. சஹாஸ்ராரா சக்ரா எனும் நிலையில் ஓம் ஜெபித்தால் வலிப்பு நோய் குணமாகிறது.

இசை ஒரு வியாதியை, நோயின் தன்மையை, முழுமையாகக் குணப்படுத்தாவிட்டாலும் மனதையும் உடலையும் செம்மையாக ரம்மியமாக வைத்துக் கொள்ள நிச்சயம் உதவுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. மனிதனின் தகவல் தொடர்பை மேம்படுத்த, வெற்றிக்கு வழிவகுக்க, துக்க நிலைகளை சமாளிக்க, சுயமரியாதை மேலோங்கச் செய்ய இசை நிச்சயம் உதவுகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆன்மீக மனநிலை உயர நாம் இருக்கும் நிலையிலிருந்து உயர இசை உதுவுகிறது என்பதை உணர்வோம்.

சப்தஸ்வரமுமே (ஸ ரி க ம ப த நி ஸ) இசை வைத்தியம் தான். இவற்றால் உருவாக்கப்பட்ட ராகங்கள் இதற்கு மூலமாக இருக்கின்றன. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வந்து சாம வேத ராகத்தின் தன்மைகளை எடுத்துரைக்கிறது. ராகங்கள் பல்வேறு நோய்களை குணப்படுத்துகின்றன. இன்னும் இது பற்றிய ஆராய்ச்சி தொடர்கின்றது.மகிழ்ச்சி ஹார்மோன் வெளிவருவதும், பல உடல்ரீதியான வேதியல் மாற்றம் நிகழ்வதும் இசையால் சாத்தியம் என்று நிரூபித்து வருகின்றனர். மன அழுத்தம் குறைய மன அமைதி பெற இசை உதுவுகிறது. செய்ய வேண்டிய கஷ்டமான வேலைகளை எளிதாய் செய்ய முடிக்க இசை உதவுகிறது என்பதால் பல நிறுவனங்களில் மெல்லிய இசை ஓசை தொடர்ந்து கேட்கச் செய்கிறார்கள்.

No comments:

Post a Comment