Tuesday, November 25, 2014

Man Proposes....God disposes...

கதையல்ல நிஜம் - 10
- டாக்டர் பாலசாண்டில்யன் 

தவமணி கிராமத்திலிருந்து வந்தாலும் விவரமாக இருந்தான். ஆறு மாதம் ஊருக்கும் பட்டணத்திற்கும் படையெடுத்தது வீண் போகவில்லை. ஒரு நாள் நள்ளிரவு தவமணி முதல் முறையாக விமானம் ஏறி கடல் கடந்து பல மைல்கள் பயணித்தான்.

சௌதி அரேபியா இப்படி உள்ளது ...தனது வேலை இப்படி உள்ளது ...என்பதையெல்லாம் பத்தி பத்தியாக கடிதமெழுதி ஊருக்கு அனுப்பினான். அவ்வப்போது போனிலும் அழைத்து தன் பெற்றோரிடம், மனைவியிடம் பேசினான்.

சூரியன் உதிக்க மறந்தாலும் தவமணியின் தபால் வராமலே இருக்காது. வீட்டில் டிவி பிரிட்ஜ் வாங்கிப்போட பணம் அது தவிர மாதா மாதம் பத்தாயிரம் டிராப்ட் எடுத்து வேறு அனுப்பினான்.

ஒரு நாள் தவமணியின் மனைவியின் தலையில் இடி - அவள் மனத் தொலைகாட்சியின் பிக்சர் டுயுபே வெடித்து விடுவது போல்...

தவமணி ஆபீஸ் வேலையாக போகும் போது ஆபீஸ் ஜீப்பிலிருந்து விழுந்து தலையில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனான். தொலைபேசி செய்தி எல்லோரையும் அதிர வைத்தது.

இனி தபாலும் வராது. டிராப்டும் வராது. 

தவமணியின் சடலம் சொந்த ஊர் வர ஏற்பாடு ஆகயுள்ளதாக மற்றொரு தகவல் வந்தது. நடந்தது நடந்து போனது ...ஆக வேண்டியதைப் பார்ப்போம் என்று தவமணியின் குடும்பம் மனதைத் தயார் செய்து கொண்டார்கள்.

ஆனால் தவமணியின் சடலம் அவன் கிராமம் வந்து சேர ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் செலவு என்று பில் தரப்பட்டது.

தவமணி பத்தாயிரம் பத்தாயிரம் ரூபாயாக சரியாக ஓராண்டு அனுப்பி இருந்தான். ஒருவேளை அது இதற்குத் தானோ...

தவறு செய்தால் சவுதியில் தண்டனையாமே ...தவமணி செய்த தவறு 
தான் என்ன ?

No comments:

Post a Comment